Followers

Sunday, October 20, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நான் எங்கு சென்றாலும் ஒரு சில மூலிகைகளை வைத்து இருப்பேன். இதனைப்பற்றி இன்று தான் உங்களுக்கு சொல்லுகிறேன். அப்படி மூலிகைகளை எடுத்துச்செல்லாமல் சென்றால் வீட்டிலேயே மூலிகைகள் துணைக்கொண்டு பூஜை செய்துவிட்டு செல்வது முதல் கடமை.

எனது பூஜையறையிலும் ஏகாப்பட்ட மூலிகைகள் வைத்து இருக்கின்றேன். ஒரு சில வேலைகள் மூலிகை இல்லாமல் நடைபெறாது.  மூலிகை மற்றும் ஒரு சில மூலிகைகள், மரங்களின் வேர்கள் மற்றும் குச்சிகளை மட்டும் வைத்திருக்கிறேன். இதனைப்பற்றி எந்த விபரமும் தெரியாது. எனது குருநாதர் அனைத்தையும் கொடுத்து வைத்திருக்கிறார்.

நான் ஒரு சில வீட்டுகளுக்குள் ஆத்மாவை வைத்து செல்லும்பொழுது அவர்களின் குலதெய்வம் என்னை தடுக்கும். அதற்காக என்ன செய்வேன் என்றால் ஒரு மூலிகை குச்சியை வைத்துக்கொண்டு தியானம் செய்யதால் எப்பேர்பட்ட குலதெய்வம் வந்தாலும் தடுக்கவே தடுக்காது. நான் என் வேலையை எந்தவித தடங்கலும் இல்லாமல் செய்துவிட்டு வந்துவிடுவேன்.

மை எதுவும் வைத்திருப்பார் என்று நினைக்கவேண்டாம். அது எல்லாம் நாங்கள் பயன்படுத்துவது கிடையாது. பொதுவாக தீயவேலைகளுக்கு இறங்குவது கிடையாது. 

மூலிகைகளுக்கு ஏகாப்பட்ட சக்தி இருக்கின்றது. நம்மிடம் இருக்கும் சக்தியும் மூலிகை துணைக்கொண்டு செய்யும்பொழுது அதிக வீர்யத்துடன் செயல்படும். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

ATOMYOGI said...

ஆச்சர்யமான தகவல்கள் தங்களின் வலைதளத்தில் தொடர்ந்து அணிவகுக்கின்றன. வாழ்த்துகள்.
பொது வாழ்க்கைக்கு பயன்படும் சில மூலிகைகள் பற்றி கூறினால் வாசகர்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே.
நன்றி!