Followers

Saturday, October 26, 2013

பகட்டு வாழ்க்கை


வணக்கம் நண்பர்களே!
                     ஒரு சில பணக்காரர்கள் நன்றாக வாழ்ந்து வரும்பொழுது எதிர்பாராதவிதமாக கீழே சென்று விடுகிறார்கள். கிரகநிலைகளின் கோளாறுகளால் கீழே சென்றுவிடுவது உண்டு. அப்படி கீழே செல்பவர்கள் தாங்கள் வாழ்ந்த பகட்டான வாழ்க்கையை உதறி தள்ளமுடியாமல் கடன் வாங்கியாவது வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

கடன் வாங்கி எத்தனை நாளைக்கு தான் குடும்பம் நடத்துவது மேலும் மேலும் கடன்கள் தான் வரும். அதுவே மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும்.  ஒரளவுக்கு மேல் கடனை வாங்ககூடாது. இது பக்கம் இருக்கட்டும்.

எப்படி பணம் இருக்கின்றபொழுது வாழ்ந்தோமே அதைப்போல் பணம் இல்லாதபொழுதும் வாழ்வது மிகப்பெரிய தவறு. சும்மானாலும் பகட்டாக வாழ்வது மனிதர்களை மதிக்காமல் இருப்பது. உண்மையில் மனிதர்களை மதிக்காமல் வாழ்ந்ததால் தான் உங்களை கீழே தள்ளி ஆண்டவன் சோதனை செய்கிறான். மீண்டும் மீண்டும அதே தவறை செய்வது கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் நீங்கள் மறுபடியும் அந்த நிலைக்கு வருவது கடினம்.

நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்கள் செய்யும் ஆடம்பரம் மற்றும் பேச்சு அடுத்தவர்களுக்கு எரிச்சலைடையவது போல் இருக்கும்.நான் அவர்களின் வீட்டிற்க்கு செல்லும்பொழுது கூட என்னிடமே அவ்வாறு சிலபேர் பேசுகிறார்கள். உங்களின் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுவதற்க்காக மட்டுமே நான் வந்திருக்கிறேன். நீங்கள் இப்படி பேசினால் நீங்கள் நன்றாக வாழ்கிறிர்கள் என்று நான் திருப்பிவரவேண்டியது தான். உங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது.

உங்களின் உண்மை நிலை என்ன என்று தெளிவாக விளக்கிவிடுவது நல்லது. உங்களின் ஜாதகத்தை பார்த்தால் தெரிந்துவிடும் இருந்தும் நீங்கள் உங்களைப்பற்றி சொல்லிவிட்டால் உங்களுக்கு என்னால் முடிந்த உதவி கிடைக்கும். 

வாழ்வு மேலே கீழே என்று சென்றுக்கொண்டு தான் இருக்கும். அதனைப்பற்றி கவலைப்படமால் இருக்கின்றவரை சந்தோஷத்தோடு வாழ்வது நல்லது. மனிதர்களை மனிதர்களாகவோ பாருங்கள். வீணான பகட்டு வாழ்க்கை வேண்டாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: