Followers

Thursday, October 10, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 49


ணக்கம் ண்பர்களே!
                    ராகு தசாவில் சந்திரன் புத்தியை பற்றி பார்த்து வருகிறோம். சந்திரன் கெட்டு அவர்களுக்கு புத்தி நடைபெறும் காலத்தில் என்ன பலனை ராகு தசா சந்திர புத்தி தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

லக்கினத்தில் கெட்டு இருந்தால் மனநோய் தாக்குதல் நடைபெறும் காலமாக இது இருக்கும். பைத்தியம் பிடிக்கும் நிலையும் ஏற்படும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். உடல் திடீர் பருமன் ஏற்படும் அதே நேரத்தில் ஒல்லியாகவும் வந்துவிடும். மருத்துவரை அணுகிவிடுவது நல்லது.

இரண்டாவது வீட்டில் கெட்டு இருந்தால் பணம் என்பது வரலே வராது. குடும்பத்தில் மகிழ்ச்சி போய்விடும். எந்த நேரமும் சண்டை சச்சரவு ஏற்படும். சாப்பிடும் சாப்பாடு கெட்டு வாந்தி எடுக்கவேண்டிவரும்.உங்களின் வாழ்நாள் குறித்து கவலை ஏற்படுத்திவிடுவார். மற்ற கிரகங்களின் நிலையை பொருத்து மரணம் கூட ஏற்பட வைக்கும்.

மூன்றாவது வீட்டில் கெட்டு இருந்தால் பயணத்தில் பிரச்சினையை உண்டாகும். காதில் நோய் ஏற்பட்டு தண்ணீர் போல் வரும். பக்கத்துவீட்டுக்காரர்களால் அதுவும் பக்கத்துவீட்டு பெண்களால் பிரச்சினை ஏற்படும்.சிறுபயணங்கள் செய்யும்பொழுது விபத்து ஏற்படும். இப்பொழுது எல்லாம் பயணம் செய்யாமல் இருக்கமுடியாது. கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது

நான்காவது வீட்டில் கெட்டு இருக்கும்பொழுது தாயாருக்கு இந்த காலம் என்பது கண்டம் என்று சொல்லலாம். சுகம் கெட்டு அடிக்கடி மருத்துவமனை செல்ல நேரிடும். வாகனங்கள் விபத்தை சந்திக்க நேரிடும். குறிப்பாக விபத்து ஏற்பட்டு ஏதாவது ஒரு நீர்நிலையில் போய் விழும். வீடு கட்டும் பணி அப்படியே நின்றுவிடும். கல்வி தடைப்படும்.

ஐந்தாவது வீட்டில் கெட்டு இருந்தால் மனதில் ஒருவித பயம் ஏற்படும். குழந்தைகள் வழியில் பிரச்சினை ஏற்படும். கருவுற்று இருக்கும் பெண்களாக இருந்தால் கருக்கலைப்பு கூட ஏற்படலாம். சுயஅறிவு என்பது இருக்காது. தாயின் பணம் கரையும் அதனால் உங்களுக்கு பிரச்சினை ஏற்படும்

ஆறாவது வீட்டில் கெட்டு இருந்தால் எதிரிகளின் கை ஓங்கும். நோய்களின் தாக்கும் அதிகரிக்கும். சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகாது. செய்யும் வேலையை விட வேண்டிவரும். நீங்கள் தொழில் நடத்திக்கொண்டிருப்பவர் என்றால் உங்களின் தொழிலில் வேலையாட்கள் பிரச்சினையை ஏற்படுத்துவார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: