Followers

Wednesday, August 16, 2017

மருத்துவம்


வணக்கம்!
          ஒரு நோயை கண்டறிந்து அதனை நீக்குவது என்பது பெரிய விசயம். சோதிடத்தில் நோயை கண்டறிவது என்பது பெரிய தலைப்பு அது. அதனைப்பற்றி நிறைய தகவல் இருக்கின்றன. நமக்கு எப்படிப்பட்ட நோய் வரும் அதனை கண்டறிந்து அதற்கு தீர்வு என்ன என்பது எல்லாம் அதில் வரும்.

ஒரு மருத்துவருக்கு நோய்க்கு மருந்து மட்டும் கொடுப்பதை விட அவர்க்கு சோதிடமும் தெரிந்து இருக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். சோதிடம் தெரிந்தால் தான் அவர் பிறர்க்கு சரியானமுறையில் தீர்வை தரமுடியும்.

நாம் ஆறாவது வீட்டில் இருந்து இந்த நோய் வந்திருக்கின்றது அல்லது வரும் என்று சொன்னால் அதற்கு பரிகாரம் ஒரு வழிபாட்டை சொல்லலாம். சரியான மருந்தை அதற்கு தகுதியானவர்கள் தான் சொல்லவேண்டும். 

ஒரு நோய் வந்துவிட்டால் அந்த நோயை குணப்படுத்த எந்த மருத்துவர் உங்களுக்கு சரியான மருத்தை கொடுப்பார் என்பதை தெரிந்துக்கொண்டு அதனை எடுக்கவேண்டும். அதாவது உங்களுக்கு ஒரு வருகின்றது என்றால் அந்த நோய்க்கு எந்த மருத்துவரை நாடலாம் என்பதை சொல்ல ஒரு ஆள் வேண்டும்.

இன்றைய காலத்தில் எந்த மருத்துவத்தை நாடினால் அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை அறிந்துக்கொண்டு கூட மக்கள் அந்தந்த மருத்துவத்தை நாட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த மருத்துவத்தை சொல்லுவதற்க்கும் ஒரு ஆள் வேண்டும். இதனை எடுங்கள் சரியாகும் என்று சொல்லுவார்கள். அதற்கு நல்ல ஆட்களை நாம் பழக்கம் வைத்துக்கொள்வது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: