Followers

Tuesday, August 22, 2017

ஆறில் செவ்வாய்


வணக்கம்!
         ஒரு சிலருக்கு ஆறில் செவ்வாய் இருக்கும் அவர்களை பார்த்தால் வட்டி தொழிலில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டு இருப்பார்கள். வட்டி தொழில் செய்வதற்க்கு ஆறில் உள்ள செவ்வாய் நல்ல வழி வகுக்கும்.

பணத்தை வெளியில் கொடுத்து அதனை வாங்குவது என்றால் அது அவ்வளவு எளிதான காரியமா என்ன அதற்கு எந்தளவுக்கு தைரியம் வேண்டும். ஒரு சிலர் ஒரு பைசா கூட விடாமல் வசூலித்துவிடுபவர்கள் எல்லாம் இருக்கின்றனர்.

ஒரு சிலர் கொஞ்ச பணத்தை கொடுத்துவிட்டு வட்டி மேல் வட்டி போட்டு இருக்கின்ற இடத்தை எல்லாம் பிடிங்கிக்கொண்டு போய்விடுபவர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் செவ்வாய் ஆறில் இருக்கும்.

செவ்வாய் ஆறில் இருக்கும்பொழுது தைரியத்தை அதிகம் கொடுத்து பிறரை பணியவைத்துவிடுவார்கள். செவ்வாய் ஆறில் இருந்தால் பொதுவாக பணம் அவர்களிடம் வாங்கினால் நாம் அழிந்துபோய்விடுவோம். 

அவனின் ராசி அவன் பணம் கொடுத்தால் நம்முடைய நிலத்தை நாம் இழக்கவேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா. அவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் ஆறில் நிற்க்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: