Followers

Sunday, August 20, 2017

மனோசக்தி


வணக்கம்!
          நல்ல மனோசக்தி உடைய ஒருவரிடம் நாம் நல்ல அன்பு வைக்கும்பொழுது அவர்களின் மனோசக்தியின் வழியாக நம்மை வாழ்த்தினாலே போதும் நாம் பெரியளவில் வளர்ச்சியை கண்டுவிடலாம்.

ஒவ்வொரு சாமியார்களிடமும் இப்படிப்பட்ட சக்தி தான் இருக்கின்றது. அவர்களிடம் நாம் ஆசி வாங்கினாலே போதும் அவர்களிடம் உள்ள சக்தி நம்மை வழிநடத்த ஆரம்பித்துவிடும்.

நாம் ஒரு இடத்தில் இருப்போம் நாம் ஆசி வாங்கி சாமியார் ஒரு இடத்தில் இருப்பார். நமக்கு ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவரை அறியாமலேயே அவரின் சக்தி நம்மை வந்து காக்கும்.

இது எப்படி நடக்கிறது என்று எல்லாம் நாம் ஆராய்ச்சி செய்யகூடாது. நமது வேலை அதுவல்ல அவர்களின் சக்தி நம்மை காத்துக்கொண்டே இருக்கின்றது என்பது மட்டும் உண்மையாக இருக்கின்றது.

ஒரு தவறான வழிக்கு நாம் செல்வதை கூட அந்த சக்தி தடுத்து அது நம்மை நேர்வழிக்கு கொண்டு செல்ல வைக்கும். முடிந்தளவுக்கு நல்ல மனோசக்தி உடையவர்களின் அன்பை பெறுங்கள்.

சென்னையில் இருக்கிறேன். சென்னையில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும். Cell No 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: