Followers

Wednesday, August 9, 2017

கனவு


வணக்கம்!
          திங்கள்கிழமை இரவு முழுவதும் அம்மனுக்கு வனபூஜை நடைபெற்றது. நேற்று இரவு நமது பகுதியில் சுமாராக மூன்று மணி நேரம் நல்ல மழை. அம்மனின் அருளால் சாத்தியப்பட்டது என்றே சொல்லலாம்.

கனவைபற்றி நமது ஜாதககதம்பத்தில் எழுதியவுடன் நிறைய பேர்கள் இந்த கனவைப்பற்றி தான் விசாரிக்கின்றனர். கனவு ஒருவருக்கு வரவே கூடாது என்பது தான் ஆன்மீகம் சொல்லும் கருத்து. இதனைப்பற்றி ஆன்மீக அனுபவங்கள் பதிவுகளில் நிறைய எழுதியிருக்கிறேன்.

நீங்கள் ஆன்மீகத்தில் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்பதைப்பற்றி தெரிந்துக்கொள்வதற்க்கு ஒரு சோதனையை தருகிறேன் உங்களை சோதித்து பாருங்கள்.

ஒரு சாதாரண மனிதனுக்கு கனவு என்பது வரும். கனவு வராமல் இருப்பதற்க்கு ஆன்மீகத்தில் நிறைய பயிற்சிகளை செய்யவேண்டும். ஆன்மீகத்தில் பயிற்சி செய்தால் மட்டும் இது சாத்தியப்படும். பயிற்சிகளை செய்பவனுக்கு ஒரு காலத்திற்க்கு பிறகு கனவு வராமல் இருக்கும்.

முதலில் உங்களின் கனவு வெள்ளையாக வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். கருப்பு வெள்ளையாக உங்களின் கனவு வந்தால் நீங்கள் இதுவரை ஆன்மீகத்தில் இருந்து ஒரு படி கூட உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

உங்களின் கனவு கலர் வண்ணத்தில் வந்தால் நீங்கள் ஆன்மீகத்தில் ஒரு நல்ல நிலைக்கு வந்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். அதாவது உங்களின் ஆன்மீகம் உங்களுக்கு கை கொடுத்து இருக்கின்றது என்று அர்த்தம்.

கண்டிப்பாக மேலே சொன்ன தகவலை வைத்து உங்களை சோதனை செய்வதற்க்கு கூட கஷ்டப்படுவீர்கள் ஏன் என்றால் உங்களின் கனவைப்பற்றி ஒரு விழிப்பு இருந்திருக்காது. இனிமேல் தான் உங்களுக்கு விழிப்பு வரும். கண்டிப்பாக இதனை சோதனை செய்து பாருங்கள்.

மேலே சொன்ன அனைத்தும் ஆன்மீக அனுபவங்கள் பகுதியில் இருந்து நான் சொன்னதை உங்களுக்கு தருகிறேன். ஆன்மீக அனுபவங்கள் பதிவை நீங்கள் படிக்கவேண்டும் என்றால் பனிரெண்டாயிரம் பணத்தை கட்டிவிட்டு தொடர்புக்கொள்ளுங்கள்.

ஆடி மாதத்தில் அனைவரையும் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துங்கள் என்று சொல்லுவது உண்டு. ஆடி மாதம் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்திவையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: