Followers

Tuesday, August 22, 2017

வேண்டுகோள்


வணக்கம்!
          சென்னையில் ஜாதககதம்ப நண்பர்களை சந்திக்கும்பொழுது ஒரு விசயத்தை கவனித்தேன். அவர்களின் பல ஆசைகளை அல்லது அவர்களின் நோக்கத்தை இதுவரை என்னிடம் போனில் கூட சொல்லவில்லை நேரில் செல்லும்பொழுது என்னிடம் சொல்லுகின்றார்கள்.

நாம் அடிக்கடி ஜாதககதம்பத்தில் பரிகாரத்தை சொல்லும்பொழுது கூட உங்களின் நோக்கம் அல்லது உங்களுக்கு என்ன தேவை என்று கேட்பது உண்டு. அதில் கூட பல நண்பர்கள் தங்களின் நோக்கம் என்ன என்று சொல்லுவதில்லை.

நோில் சந்திக்கும்பொழுது நமது நண்பர்கள் என்னிடம் சொல்லுகின்ற தகவல் அனைத்தும் புதுமையாக இருக்கின்றது. அவர்களின் விருப்பம் என்ன என்பது சந்திக்கும்பொழுது மட்டுமே சொல்லுகின்றனர்.

உங்களின் இலக்கு அல்லது எனக்கு இது இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அதனை முதலில் தெரிப்பது உங்களின் ஆன்மீக ஆலாேசகர்களிடம் தான் தெரிவிக்கவேண்டும். அப்பொழுது தான் அது நடக்க அவர்கள் ஆலோசனை சொல்லமுடியும்.

என்னிடமும் உங்களின் நோக்கத்தை சொல்லிவிட்டால் உங்களின் தேவைக்கு தகுந்தமாதிரி ஆன்மீக வழியை செய்துக்கொடுக்கமுடியும். தினமும் அம்மனிடம் வேண்டுதலை வைக்கலாம்.

பரிகாரம் இன்னமும் அறிவிக்கவில்லை என்ன என்று நண்பர்கள் கேட்டார்கள். கொஞ்ச இடைவெளி விட்டு அதனை செய்யலாம் என்று தான் தள்ளி வைத்திருக்கிறேன். வருகின்ற அம்மன் பூஜை முடிவடைந்தவுடன் பரிகார அறிவிப்பு வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: