Followers

Thursday, August 24, 2017

ஆறில் குரு


வணக்கம்!
          பொதுவாக குரு கிரகம் மறைவுஸ்தானத்திற்க்கு மட்டும் செல்லகூடாது. மறைவுஸ்தானத்திற்க்கு சென்றால் வாழ்க்கை போராட்டமாக அமைந்துவிடும் அதிலும் ஆறாவது வீட்டிற்க்கு குரு கிரகம் சென்று அமைந்துவிட்டால் பெரியளவில் போராட்டம் இருக்கும்.

குரு கிரகம் மறைவுஸ்தானத்திற்க்கு செல்லும்பொழுது எந்த வகையிலும் பணவரவு வராது என்பது தான் கொஞ்சம் கடினமான ஒன்று. யாரிடமும் பணம் கேட்டாலும் அதாவது கடனுக்கு கேட்டால் கூட கிடைக்காது.

கடன் எப்படியாவது கிடைத்துவிட்டால் அதனை திரும்ப கொடுப்பது கடினமாகிவிடும். கடன்காரன் துரத்தியதால் ஊரை விட்டு தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய ஒரு நிலை ஏற்படும். கடனுக்கு வட்டி கட்டகூட பணம் வராது.

ஆறில் குரு கிரகம் அமைந்தால் அவர்களுக்கு அஜீரணகோளாறு ஏற்படுவதற்க்கு வாய்ப்பு அதிகம். உடல் நிலையில் அதிக கவனம் தேவை. குரு லக்கினமாக இருந்து ஆறில் சென்றால் ஏதாவது ஒரு நோய் இருந்துக்கொண்டே இருக்கும்.

பெரும்பாலும் அடிமைதொழில் செய்வதாக அமையும். ஒரு வேலையில் இவர்கள் சேர்ந்தால் அந்த தொழிலை நடத்துபவர் தொழிலில் நஷ்டம் அடைந்து இவர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத ஒரு நிலை ஏற்படும். ஆறில் குரு கிரகம் இருப்பது நல்லதல்ல.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir, For Thanusu Lagnam, Guru gets Ucham at 8th house and only for that lagnam, its allowed if Guru sits in 8th. Thanks for ur lesson.