Followers

Monday, August 28, 2017

ஆறில் லக்கினாதிபதி

ணக்கம்!
          லக்கினாதிபதி ஆறாவது வீட்டிற்க்கு சென்றால் அந்த நபருக்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு வியாதி இருந்துக்கொண்டே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எப்பொழுதும் வியாதி இருந்துக்கொண்டே இருக்கின்றது என்றால் அது எப்படி சாத்தியப்படும். நோய் முற்றினால் மரணம் வரும் என்று ஒரு கருத்தும் வருகின்றது.

லக்கினாதிபதி ஆறாவது வீட்டிற்க்கு செல்லும்பொழுது நோய் என்பது அதிகப்பட்சம் சக்தி குறைபாடாக இருக்கும். நல்ல தெம்போடு இருக்கும் நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் சக்தி குறைவாக இருக்கும். அவர்களுக்கு களைப்பு போல் தோன்றும். மறுபடியும் அது தானாகவே சரி செய்யும் அப்படி இல்லை என்றால் நன்றாக சாப்பிடவேண்டும்.

ஒரு சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிடும். அதில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். 

லக்கினாதிபதி ஆறில் இருந்தால் அந்த நபர்கள் நல்ல சத்தான உணவை சாப்பிட்டுக்கொண்டு இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு இயற்கையாகவே நல்ல சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

ஒரு சிலரை நீங்களே பார்த்திருக்கலாம் எப்படி டா இவன் மட்டும் எந்த நேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறான் உடலும் நன்றாகவே இருக்கின்றது எப்படி செரிக்கும் என்று நினைக்கலாம். அவர்களுக்கு எல்லாம் லக்கினாதிபதி ஆறில் நல்ல முறையில் இருந்தால் இப்படி சாப்பிடுவார்கள்.

கோயம்புத்தூர், திருப்பூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும். பயணதிட்டம் இருப்பதால் சந்திக்க நினைக்கும் நண்பர்கள் முன்கூட்டியே தொடர்புக்கொள்ளவும். Cell No : 9551155800.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: