Followers

Friday, September 20, 2013

ஆன்மீக அனுபவங்கள் 114


வணக்கம் நண்பர்களே!
                    ஆன்மீக அனுபவத்தில் சந்நியாசிகளில் ஒரு பிரிவைப்பற்றி பார்க்கலாம். வடநாட்டில் நார்த் என்று ஒரு பிரிவு சந்நியாசிகள் இருக்கிறார்கள். இவர்கள் நாகலாந்தை சேர்ந்தவர்கள். இவர்களின் வாழ்விடம் சுடுகாடு மட்டுமே. வருடம் முழுவதும் சுடுகாட்டில் மட்டுமே வசிப்பவர்கள்.

நாகலாந்து மக்களின் ஒரு பிரிவில் மூத்தபையன் பிறந்தால் அவனை இந்த சந்நியாசி பிரிவில் சேர்த்துவிட்டுவிடுவார்கள். அந்த பையனை சந்நியாசிகள் தான் வளர்ப்பார்கள். இவன் வளர்வதும் சுடுகாட்டில் தான். இந்த சந்நியாசிகள் இந்தியாவில் இருக்கும் சந்நியாசிகளில் மிகப்பெரிய சக்தி படைத்தவர்கள். இவர்களை மிஞ்சுவதற்க்கு ஆட்கள் கிடையாது. இவர்கள் யாரிடமும் பேசமாட்டார்கள் எப்பொழுதாவது நகரத்திற்க்குள் வருவார்கள்.

நகரத்திற்க்குள் ஆட்கள் இருக்கும் முச்சந்தியில் வந்து ஒரு வேல் வைத்துவிட்டு ஒரு துணியை போட்டுவிட்டு போய்விடுவார்கள். அந்த வழியில் செல்லும் அனைத்து மக்களும் அந்த துணியில் பணத்தை போட்டுவிட்டு போவார்கள். இவர்கள் இரவில் வந்து அந்த பணத்தை எடுத்துக்கொண்டு போவார்கள். மற்றபடி ஊருக்குள் வரமாட்டார்கள். நார்த் சந்நியாசி வேல் வைத்துவிட்டால் அந்த துணியில் பணமாக கொட்டும். அதனை ஒருவரும் தொடமாட்டார்கள். அவர்கள் எப்பொழுதாவது வந்து பணத்தை எடுத்துக்கொண்டு செல்வார்கள். 

அவர்களிடம் மட்டும் நாம் எதுவும் செய்யமுடியாது. அனைத்து சித்துக்களும் அவர்களிடம் இருக்கும். மிகப்பெரிய சக்தி படைத்தவர்கள். அவர்கள் யாரிடமும் பேசுவது கிடையாது.அவர்களின் வாசம் சுடுகாட்டில் இருப்பதால் அனைத்து சித்துக்களும் அவர்களுக்கு கைவந்த கலை. 

அவர்களை சந்தித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதற்கு காரணம் எனது குருநாதருக்கு அவர்களுடன் பழக்கம் இருப்பதால் சந்தித்து இருக்கிறேன். நார்த் சந்நியாசியின் சக்தியை இந்த உலகத்தில் உள்ள எவராலும் மிஞ்சமுடியாது. அந்தளவுக்கு பவர்புல் சந்நியாசிகள் அவர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: