Followers

Friday, September 20, 2013

நம்பினால் நம்புங்கள் : மாந்தி


வணக்கம் நண்பர்களே!
                    மாந்தியைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம். மாந்தி கிரகத்தைப்பற்றி ஏற்கனவே சொன்னாலும். இப்பதிவில் புதிய தகவலை பார்க்கலாம்.

மாந்தியை வைத்து தான் கேரளசோதிடம் இருந்தாலும் மாந்தியைப்பற்றி அங்கு சொல்லிதருவது கிடையாது. எனக்கு தெரிந்தவரை சொல்லி தரவில்லை. ஒரு சிலர் சொல்லிக்கொடுக்கலாம். மாந்தியை கொண்டு பலன் சொல்லலாம் ஆனால் அதனை வைத்து வேலை செய்ய கற்று தர மாட்டார்கள். வேலை செய்வது எப்படி என்று தெரிந்தால் மட்டுமே சோதிடத்தில் நாம் புகுந்து விளையாட முடியும்.

நான் எனது குருவிடம் இதனைப்பற்றி கேட்டேன். அவர் சொன்னார் உனக்கு கற்று தரமுடியாது நீனாக தான் கற்றுக்கொள்ளவேண்டும். இது அனைத்தும் செயலில் இறங்கி செய்ய வேண்டியது. ஏட்டு கல்வி கிடையாது. உன்னை உணர்ந்து கற்றுக்கொள் என்றார். நான் என்னடா எது கேட்டாலும் தருபவர் இதனை சொல்லி தரமாட்டேன்கிறார். அனுபவத்தில் கற்றுக்கொள் என்கிறாரே நினைத்துக்கொண்டு இருந்தேன்.

ஒரு நாள் நினைத்து பார்க்கும்பொழுது குரு இப்படி சொன்னார் என்றால் கண்டிப்பாக அது நமக்கு சவால் தான் விடுகிறார் என்று நானும் செயலில் இறங்கினேன். உண்மை என்ன என்று எனக்குள் உணர்ந்தேன். குறைந்தது ஆறு வருடங்கள் ஆன்மீகத்தில் ஒருவன் இருந்தால் மாந்தியை வைத்து வேலை செய்ய முடியும். எனக்கு இத்தனை வருடங்கள் எடுத்தது ஒவ்வொருவருக்கும் காலங்கள் மாறலாம்.

மாந்தியை வைத்து வேலை செய்யும்பொழுது மட்டுமே கிரகங்கள் கட்டுபடுகிறது. மாந்தியை வைத்து வேலை செய்பவர்கள் தங்களை வெளியில் காட்டிக்கொள்வதில்லை. பெரிய அளவில் வேலை செய்கிறார்கள். வருடத்திற்க்கு ஒரு வேலை மட்டுமே செய்கிறார்கள்.

தனிநபர் ஜாதகத்தில் கிரகங்களின் செயல்பாட்டை மாற்றிவிடுவது எல்லாம் இதனை வைத்து தான். கிரங்களை வீட்டையே மாற்றி அமைப்பதும் மாந்தியால் தான் செய்யமுடியும். சும்மா அடுத்த வீட்டில் அமரு என்று சொன்னால் எப்படி அமரும் அதற்கு என்று வேலை அதிகம்.

கிரக நிலைகளை மாற்றுவது கூட சி்க்கல் பிடித்த வேலை. இப்பொழுது என்னுடன் வியாபாரத்திற்க்கு என்று வந்தவர்களுக்கு மட்டும் செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். அதுவும் பதிவு மூலம் வந்தவர்களுக்கு இதுவரை தொடவில்லை. பழைய வாடிக்கையாளர்கள் ஒரு சிலர் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் செய்கிறேன்.

கிரகங்களின் நிலை கட்டுப்படுத்தும்பொழுது அவனின் நிலையை மாற்றலாம். ஒவ்வொருவரின் நிலையும் மாற்றிக்கொண்டே இருக்கமுடியாது. எங்களுக்கு என்று தோன்றும் இவனை மாற்றலாம் என்று நினைக்கும்பொழுது செயலில் இறங்குவோம்.

இப்பொழுது மாந்தியைப்பற்றி எழுதுபவர்கள் அனைவரும் புத்தகத்தில் உள்ளவற்றை வைத்து தான் எழுதுகிறார்கள் என்று தெரிகிறது. நான் கண்ட விசயத்தை ஒப்பிடும்பொழுது ஒருவரும் அதன் அருகில் கூட போகவில்லை என்று தான் என் அனுபவத்தில் தெரிகிறது.

மாந்தியை கற்கும்பொழுது பல பிரச்சினைகள் நமக்கு ஏற்படுகிறது. இல்லறத்தில் இருப்பவர்கள் மாந்தி பயிற்சி எடுக்கிறேன் என்று செல்லவேண்டாம். மிகப்பெரிய அளவில் பாதிப்பு உங்களுக்கு ஏற்படும். எனக்கு பாதிப்பு ஏற்பட்டது. குரு இருந்ததால் தப்பினேன்.குருவும் மிக திறமைசாலியாக இருக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: