Followers

Monday, September 23, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 37


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவில் மாந்தீரிக பாதிப்பை பற்றி சொன்னேன். இந்த மாந்தீரிகம் எந்த நேரத்திலும் செய்துவிடமுடியாது. ஒருத்தரை பார்த்து உன்னை உடனே மாந்தீரிகம் செய்து கொன்றுவிடுகிறேன் என்று சொன்னால் உண்மையில் அப்படி எல்லாம் செய்துவிடமுடியாது.

மாந்தீரிக பாதிப்பு எப்பொழுது நடைபெறும் என்றால் குருவின் பலம் குறையும்பொழுது செயல்படும். நமது பூர்வபுண்ணியத்தின் பலன் எல்லாம் குரு கிரகத்தின் கீழ் தான் இருக்கும். இந்த குரு கிரகம் எப்பொழுது பலம் குறைக்கின்றதோ அப்பொழுது மாந்தீரிக பாதிப்பு தலைநிமிர செய்யும். ராகுக்கும் குருவுக்கும் அதனால் தான் சண்டை. ராகு மாந்தீரிகத்தால் தாக்க நினைப்பார். குரு அதனை விடமாட்டார். 

ஒருவருடைய பூர்வபுண்ணிய பலம் குறையும்பொழுது ராகுவின் வேலை எளிதில் நடைபெறும். அதற்கு தான் அனைத்திற்க்கும் குருவின் பலன் மிக அதிகமாக வேண்டும் என்று சொல்லுவது. 

ராகு தசாவில் குருவின் பலம் குறைவாக இருக்கும். குரு சொந்த மதத்தை குறிப்பவர். ராகு பிற மதங்களை குறிப்பவர். பிறமதத்தை குறிப்பவரின் தசா நடைபெறும்பொழுது குரு தன் பலத்தை இழக்கிறார். அப்பொழுது அவருக்கு மாந்தீரிக பாதிப்பு ஏற்படும்.

மாந்தீரிகத்தை நிருப்பிக்க கூட முடியாத நிலை ஏற்படுவதற்க்கு காரணம் குருவினால் தான். குரு பலம் குறைந்த நபரை வைத்து மாந்தீரிகத்தை நிருபித்துவிடலாம்.நல்ல சக்தியை கூட நிருபணம் செயயாமல் இருக்கும்பொழுது தீயசக்தியை ஏன் நிருப்பிக்க வேண்டும்.

இந்த காலத்தில் மாந்தீரிகம் எல்லாம் தேவையில்லை அவன் அவன் கெட்டு குட்டி சுவராக அவனே போய்விடுகிறான். தமிழ்நாட்டில் மதுபானகடையை திறந்து விட்டு அவன் அவன் குடித்தே கெட்டுவிடுகிறான். இதில் எதற்கு மாந்தீரிகவாதி வேறு செய்யவேண்டும். ஆயிரம் மாந்தீரிகவாதிக்கு ஒரு மதுபானக்கடை சமம். நான் ஏற்கனவே பதிவில் சொன்னது மாதிரி பெரும்பாலான மக்கள் ராகுவின் பிடியில் இருக்கின்றனர்.

பல கெடுதல் தரும் விசயங்களை ராகு அள்ளிக்கொடுத்து கொண்டிருக்கும்பொழுது மாந்தீரிகவாதி தேவையில்லை. அவன் அவன் அவனே குழியை வெட்டிக்கொள்கிறான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

தனி காட்டு ராஜா said...

ஆயிரம் மாந்தீரிகவாதிக்கு ஒரு மதுபானக்கடை சமம்./////

U are right :)