Followers

Sunday, September 29, 2013

சகுனம்


ணக்கம் ண்பர்களே!
                     எனக்கு ஒரு பழக்கம் இருக்கின்றது. சோதிடம் பார்க்கும்பொழுது சுற்றி என்ன நடக்கிறது. நமக்கு சகுனம் எப்படி வருகின்றது என்பதை பார்த்து பலனை சொல்லுவேன். 

சகுனம் வழியாக கடவுள் நிறைய உணர்த்துவார். அதனை நாம் பார்த்துக்கொண்டு தான் சோதிடப்பலனையும் சொல்லவேண்டும். ஒரு சிலருக்கு சம்பந்தமே இல்லாமல் சொல்லிவிடுவேன். அதாவது ஒரு வீட்டிற்க்கு சூரியன் காரத்துவம் வகித்தால் நான் செவ்வாய் என்று நினைத்து சொல்லுவதும் ஒரு சில நேரத்தில் நடந்து இருக்கின்றது. அதுவும் சரியாக வரும். ஏன் என்றால் உள்ளுக்குள் இருந்து இப்படி நடக்க சொல்லுகின்றது.

ஒருவர்க்கு ஜாதகம் பார்க்க அவரின் ஜாதகத்தை வாங்கி கையில் வைத்தாலே நமது உடம்பில் அது காட்டிக்கொடுத்துவிடும். அதனை வைத்தே நாம் பலன் சொல்லிவிடமுடியும். அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நமது உடம்பில் அந்த வலி ஏற்படும்.அது நல்ல வலியாக இருந்தால் நன்றாக இருக்கும். ஒரு சிலரின் ஜாதகத்தை தொடும்பொழுது கெட்டவலி ஏற்படும்.அவர்க்கு கெடுதல் தான் வரும் என்று சொல்லிவிடலாம்.

ஒரு சிலர்க்கு ஏதாவது ஒரு செயல் செய்து தரவேண்டும் என்று நினைத்து அவர்களின் வீடுகளுக்கு சென்று செய்து தருவேன். அவர்கள் எனக்கு பணம் தருவார்கள். அந்த பணம் எதற்க்காக செலவு ஆகின்றது என்பதை பார்த்தே அவர்களுக்கு என்ன நடக்கும் என்று கண்டுக்கொள்வேன்.

ஜாதகம் என்றவுடன் ஏதோ கணக்கு போட்டு பார்ப்பதற்க்கு என்று இல்லாமல் உணர்வு பூர்வமாக அதனை நோக்கினால் பல தெரியாத விசயங்கள் நமக்கு புலப்படும். நீங்களும் இப்படி பார்க்கவும்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: