Followers

Friday, September 13, 2013

ராகு தசாவின் பலன்கள் பகுதி 25


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். இப்பதிவிலும் ராகுதசாவின் முக்கியமான ஒரு செயலைப்பற்றி பார்க்கலாம்.

உலகத்தில் உள்ள கொள்ளைகார கும்பலில் இருப்பவர்களுக்கு அதிகபட்சமாக ராகுதசா நடைபெறும். கொள்ளை அடிப்பது கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களை செய்யவர்களும் இதில் அடங்குவார்கள். ஒருவர்க்கு ராகு தசா நடைபெற்றால் அவர்களின் எண்ணமும் இப்படி தான் செயல்படும். எப்படியும் கொள்ளை அடித்தாவது பணத்தை சேர்க்க வேண்டும் என்று தோன்றும்.

எப்படியும் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்தால் திட்டமும் மிகப்பெரிய அளவில் போடுவார்கள். திட்டம் தீட்டுவதே மிக ரகசியமாக இருக்கும். இவர்களின் திட்டத்தை செயல்படுத்த ராகு தசா நடக்கும்பொழுது அவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சனி ஏதாவது ஒன்று நன்றாக இருந்தால் அந்த திட்டத்தை துணிந்து செயல்படுத்தி வெற்றி கண்டுவிடுவார்கள்.

செவ்வாய் மற்றும் சனி சரியாக அமையவில்லை என்றால் அவர்கள் திட்டம் மட்டும் போட்டுக்கொண்டு இருப்பார்கள். செயல்படுத்த மாட்டார்கள் அப்படியே செயல்படுத்தினாலும் அதில் தோல்வி காண்பார்கள்.தைரியம் இருந்தால் தானே ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியும்.

ஒரு சிலர் பதுங்கி திட்டம் போட்டுக்கொண்டே இருப்பார்கள். பாம்பு எப்படி வெளியில் தலைகாட்டாமல் வாழ்கிறதோ அதேபோல் வாழ்ந்துக்கொண்டு திட்டம் போட்டுக்கொண்டு இருப்பார்கள். ஒரு சிலர் வெளியில் வரும்பொழுது மாட்டிக்கொள்வார்கள்.

ராகுதசா எப்படி சட்டவிரோத செயலுக்கு துணைபோகிறதோ அதேபோல் அதனை கண்டுபிடிக்க வைப்பதும் ராகுதான். ஒருவர் பாதுகாப்பு துறையில் வேலை பார்த்து அவருக்கு ராகு தசா நடைபெற்றால் அவர் எப்படிபட்ட சட்டவிரோதமாக நடக்கும் செயலை கண்டுபிடித்துக்கொடுப்பார். 

நீங்கள் எந்த துறையில் இருக்கின்றீர்கள் என்பதை பொருத்து ராகுதசாவின் பலன்கள் உங்களுக்கு செய்யும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: