Followers

Sunday, September 1, 2013

தசாநாதன் பகுதி 15


வணக்கம் நண்பர்களே!
                     ஒவ்வொரு தசாநாதனுக்கும் நான் பரிகாரம் செய்ய சொல்லியிருக்கிறேன். அதே நேரத்தில் புத்திநாதனுக்கும் பரிகாரம் செய்ய வேண்டும்.

உங்களுக்கு நடைபெறும் தசாநாதனுக்கு பரிகாரம் செய்ய சொல்லிருந்தேன். பாதி பேர் செய்து இருப்பார்கள் என்று நமபுகிறேன். எனக்கு மிகவும் பழக்கப்பட்ட நண்பர்களுக்கு எல்லாம் அந்த அந்த புத்திநாதர்களுக்கும் பரிகாரம் செய்ய சொல்லிருப்பேன். இதனை உங்களிடம் சொல்லாமல் விட்டுவிட்டேன். உங்களால் முடிந்தால் செய்துக்கொள்ளலாம்.

தசாநாதனின் செயல்பாடு மிகமுக்கியமான ஒன்று என்று உங்களுக்கு தெரியும். அதைப்போல்  தசாநாதனின் செயல்பாட்டில் புத்திநாதனின் பங்களிப்பு மிக அதிகம். 

தசாநாதர்க்கும் புத்திநாதர்க்கும் இடையில் நல்ல பிரண்ஷிப் இருந்தால் தான் ஜாதகருக்கு நல்ல பலன்களை தரமுடியும். தசாநாதர்க்கு புத்திநாதர்க்கும் இடையில் சண்டை ஏற்பட்டால் ஜாதருக்கு ஒன்றுமே நல்லது தரமுடியாது. இருவரின் சண்டையில் மாட்டிக்கொள்வது ஜாதகனா இருக்கும்.இருவருக்கும் நல்ல உறவு இருக்கும்பொழுது ஜாதகன் நல்லஇருக்க முடியும்.

ஒவ்வொரு புத்திநாதர்களும் எடுத்துக்கொள்ளகூடிய காலங்கள் ஒரு சில தசாக்களில் மிக அதிகமாக இருக்கும் அதனால் அந்த தசாநாதர்ருக்கு முதலில் பரிகாரம் செய்து முடித்தபிறகு அதன் பிறகு ஒவ்வொரு புத்திநாதர்க்கும் நீங்கள் பரிகாரம் செய்யவேண்டும்.

இதனை எனது பல வாடிக்கையாளர்க்கு சொல்லுவது உண்டு. நீங்களும் உங்களுக்கு தேவை என்றால் செய்துக்கொள்ளுங்கள் அதாவது உங்களால் முடியும் என்றால் செய்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: