Followers

Thursday, September 26, 2013

ஆன்மீக அனுபவங்கள் 116


ணக்கம் ண்பர்களே!
                    ஊரில் ஒரு செய்தி ஒன்று சொல்லுவார்கள். இரவில் படுத்து தூங்கும்பொழுது தண்ணீர் குடிக்காமல் தூங்காதே என்று சொல்லுவார்கள். ஏன் என்றால் ஆத்மா நடுஇரவில் தண்ணீரை தேடி அலையும். அப்படி அலையும்பொழுது தண்ணீர் குடித்திற்குள் சென்று தண்ணீரை பருகும்பொழுது அந்த குடத்தை பூனை தட்டிவிட்டு குடத்தில் ஆத்மா மாட்டினால் நீ இறந்துவிடுவாய் என்று சொல்லுவார்கள். இப்படி இறந்தவர்களும் உண்டு. அந்த குடத்தை எடுக்கும்பொழுது உயிர் வந்துவிடும் என்றும் சொல்லுவார்கள். இதனை அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் ஆன்மீகமாக பார்க்கும்பொழுது ஒருவிதத்தில் இது உண்மையோ என்று நம்பதோன்றும்.

இதனை கிராமத்தில் உள்ளவர்கள் சொல்லும்பொழுது ஏதோ ஒரு கதைக்காக சொல்லுகிறார்கள் என்று எனக்கு தோன்றியது. வெகுநாட்கள் சென்ற பிறகு எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வைத்து பார்க்கும்பொழுது இது உண்மை என்றே தோன்றுகிறது.

மனிதன் தூங்கும்பொழுது அவனையறியாமல் அவனின் ஆத்மா வெளியில் வருகிறது. வெளியில் எதனையோ தேடுகிறது. மீண்டும் அவனின் உடலில் சென்று புகுந்துக்கொள்கிறது. அது வரை அவனின் உடலில் எந்தவித மாற்றம் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்துக்கொண்டே இருக்கின்றது. இது ஆன்மீகவாதிக்கு மட்டும் இல்லை சாதாரண மனிதர்களுக்கும் நடைபெறுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு எனது ஆத்மா வெளியில் சென்று ஒரு பைத்தியத்தை குணமாக்கிவிட்டு வந்ததை என்னால் உணரமுடிந்தது. எனது ஆத்மா வெளியில் செல்வதையும் என்னால் பார்க்கமுடிந்தது. அதே நேரத்தில் அது பல கிலோமீட்டருக்கு அப்பால் இருப்பவரை சென்று குணமாக்கிவிட்டு வருகின்றது. குறைந்தது முன்னூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பரை சென்று குணமாக்கிவிட்டு வருகின்றது. அந்த ஊர் ஞாபகம் இருக்கின்றது அந்த நபர் யார் என்று தெரியவில்லை. 

நோயை குணமாக்குவதற்க்கு என்று பயிற்சி செய்து இருந்தாலும் எனக்கு தெரியாமல் சென்று வருவதை எண்ணி நான் பயந்துவிட்டேன். இதனை ஒரு நண்பரிடம் மட்டும் அப்பொழுது பகிர்ந்துக்கொண்டேன். நாங்கள் அமர்ந்து அதற்க்கு என்று பயிற்சி செய்யும்பொழுது ஆத்மா வெளியில் சென்று யாரை பார்க்கவேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இது அதுவாகவே சென்று வருவதை என்னால் நம்பமுடியவில்லை.

என்னை அறியாமல் பலபேர்க்கு நன்மை செய்வற்க்கு என்று நமது ஆத்மா பயன்படுகிறது என்பது மகிழ்ச்சி நமது ஆத்மாவிற்க்கு தனி ஒரு சக்தி இருக்கவேண்டும் என்று மட்டும் தோன்றியது. ஆத்மா வெளியில் செல்லும்பொழுது கண் மற்றும் காது எந்தவித உணர்வு உறுப்பும் இல்லாமல் வெளியில் நடப்பதை நன்றாக தெரிகிறது.

அனைத்து மக்களுக்கும் இது நடக்கிறது ஆனால் ஒரு சிலர் உணருகிறார்கள். இது கனவு போல் இருப்பது இல்லை. வேறு விதமாக நாம் நேரில் செய்வது போல் இருக்கின்றது. என்ன இதனை நிருபணம் செய்வதற்க்கு என்று இன்னமும் பயிற்சி தேவை. (ஊரை சுத்தவே நேரம் கிடைக்கமாட்டேன்கிறது இதில் பயிற்சி செய்ய நேரம் ஏது).  

இதனை போல் தான் வெளியில் சென்று ஒரு குழந்தை பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா. அது 100 சதவீதம் உண்மையான ஒன்று தான். நன்றாக பயிற்சி செய்த பிறகு இதனை நிருபணம் செய்யலாம். எந்த வித உபகரணங்கள் இல்லாமல் உலகத்தில் எங்கு என்ன என்ன இருக்கின்றது என்று பார்க்கலாம். ஏன் இந்த பிரபஞ்சத்தில் எங்கு இருந்தாலும் அதனை கண்டுபிடிக்கமுடியும். 

குரு இதனை நன்றாக செய்வார் ஆனால் நான் அந்தளவுக்கு இன்னமும் முன்னேறவில்லை.ஒரு தனிஉலகம் இருக்கின்றது என்பது மட்டும் உண்மை.அதனை நோக்கி செல்கிறேன். பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

4 comments:

antonyarun said...

100 சதவீதம் உண்மையான ஒன்று தான். நன்றாக பயிற்சி செய்த பிறகு இதனை நிருபணம் செய்யலாம்.

Dear Sir,

where and who can learn this training? What is the requirement?
Thanks
Arun

rajeshsubbu said...

வணக்கம் இதனை குரு தான் கற்றுக்கொடுத்தார். நமக்கு ஒன்றும் தேவையில்லை நாம் ஒழுங்காக பயிற்சியை செய்தாலே போதுமான ஒன்று. அனைத்து மனிதர்களும் செய்யமுடியும். நன்றி

thamirabaranithenral said...

vazhthukkal. kandipaka mudiyum. neriya muyarchi seyyungal payirchi seyya.

p thirumalaikumar

rajeshsubbu said...

//* thamirabaranithenral said...
vazhthukkal. kandipaka mudiyum. neriya muyarchi seyyungal payirchi seyya.

p thirumalaikumar *//

நன்றி