Followers

Sunday, September 22, 2013

பணம்


வணக்கம் நண்பர்களே!
                     பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசும்பொழுது பல கோடி சம்பாதிக்கவேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள். எனது ஜாதகத்தில் அதற்கு வழி உண்டா என்று கேட்கிறார்கள். 

எல்லாம் தொழிலுக்கு உதவதால் வந்த கேள்வி இது என்பது அவர்கள் பேசும்பொழுதே தெரிகிறது. அனைவரும் சம்பாதிக்கவேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை. இன்றைய உலகம் அப்படி மாறிவிட்டது. சும்மா சுற்றிக்கொண்டு இருக்கும் சந்நியாசிகளுக்கும் பணம் என்பது தேவையான ஒன்றாகிவிட்டது. எனக்கும் முதல் முதலில் குரு அறிமுகம் ஆனவுடன் எப்படியும் இவரைவைத்து சம்பாதிக்கவேண்டும் என்று தான் தோன்றியது. பணத்திற்க்கு கஷ்டப்பட்டால் பிறகு என்ன தோன்றும்.

ஒவ்வொருவருக்கும் இந்த ஆசை இருக்கும். ஆசையை செயல்படுத்த வேண்டும். ஆசைப்பட்டுக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது அதனை செயல்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யவேண்டும். ஒரு தொழில் கூட இல்லாமல் ஆசைப்பட்டால் என்ன செய்வது. முதலில் ஒரு தொழிலை உருவாக்கவேண்டும். பிறகு படிப்படியாக முன்னேற்றம் கண்டு அந்த தொழிலில் வெற்றி பெறவேண்டும்.

தொழிலே இல்லாமல் கோடி சம்பாதிக்கவேண்டும் என்றால் என்ன செய்யமுடியும்.அனைவராலும் தொழிலில் வெற்றி பெறமுடியும். அவர்களின் ஜாதகத்தில் கிரகநிலைகளை நன்றாக அலசி அதற்கு தகுந்தார்போல் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்களுக்கு சோதிடம் தெரியும். சோதிடத்தில் பல கிரகங்கள் நல்லதும் செய்கிறது தீயதும் செய்கிறது. தீய கிரகங்களின் தாக்கத்தை குறைத்தால் ஒருவர் செய்யும் தொழில் வெற்றி பெற்றுவிடும். நாம் ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கிக்கொண்டு வருவோம். அப்படி வணங்கி வருவதால் ஒரளவு மட்டுமே தீயகிரகங்களின் தாக்கம் குறையும். அதுவும் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அது மீண்டும் வேலையை காட்ட தொடங்கிவிடும்.

ஜாதகத்தின் துணையோடு தான் ஒருவரை நிறுத்தமுடியும் என்று எனது குருநாதரும் சொல்லுவார். ஏன் என்றால் ஜாதகம் இல்லாமல் எதுவும் செய்யமுடியாது. ஜாதகத்தை எடுத்துவிட்டால் அதில் பல வழிகள் நமக்கு கிடைத்துவிடும். அதன் பிறகு நாமே அதனை சரிசெய்துவிடமுடியும். அவர் செய்கின்ற தொழிலில் அவர் தான் மிகப்பெரிய ஆளாக இருப்பார்.

நான் இன்று பலபேர்க்கு செய்துக்கொடுத்துக்கொண்டிருப்பதால் மட்டுமே அவர்கள் நிற்கமுடிகிறது. அப்படி இல்லை என்றால் அவர்களின் தொழில் என்றோ இழுத்து மூடிவிட்டு சென்று இருப்பார்கள்.

இந்தியாவில் இருக்கும் தொழில்நடக்கும் இடங்களுக்கு நான் எடுத்த ஒவ்வொரு தொழிலையும் நான் இன்று அடிக்கடி சென்று பார்த்து வந்துக்கொண்டு இருக்கிறேன். ஏன் என்றால் அப்பொழுது மட்டுமே அம்மனின் பார்வை அங்குவிழும் மற்றும் குருவின் பார்வை அங்கு விழும் என்பதால் அப்படி செய்வது உண்டு. 

வெளிநாட்டு தொழில்களை நான் எடுத்தது எல்லா நபர்களிடமும் அவர்களின் தொழிற்சாலையை போட்டு எடுத்து அனுப்ப சொல்லி நான் பார்த்துவிட்டு எனது குருநாதரிடம் காட்டியுள்ளேன்.

ஒரு தொழிலை எடுத்துவிட்டால் மிகச் சரியாக நடக்கவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவேன். அதனால் தான் இன்று என்னை பல தொழில்அதிபர்கள் தேடி வருகிறார்கள். அவர்கள் தூங்கினாலும் நான் தூங்குவதில்லை.

நான் ஏழையாக இருந்து பல கஷ்டப்பட்டு இந்த தொழிலை தொடங்கியுள்ளேன் எப்படியும் என்னை உயர்த்துங்கள் என்று வாருங்கள் உங்களை மிகப்பெரிய அளவில் உயர்த்திவிடுகிறேன். நான் எப்படி நடந்துக்கொள்கிறோனோ அதேபோல் நீங்களும் நடந்துக்கொள்ளவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

ADMIN said...

மிகச்சிறந்த பதிவு ஐயா...

ஜாதகத்தில் உள்ள கிரகநிலைகளை நமக்கு சாதகமாக மாற்றுவதன் மூலம் செய்யும் தொழிலில் வெற்றியடைய முடியும் என்ற ஜாதக ரீதியாக கருத்தை மட்டும் முன் வைக்காமல் பணம் சம்பாதிக்க ஆசை வைத்தால் மட்டும் போதுதாது.. அதை செயல்படுத்த வேண்டும் என்ற சீரிய சிந்தனையையும் கொடுத்தமை பாராட்டுக்குரியது.

பகிர்வுக்கு நன்றி.

எனது தளத்தில் இன்றைய பதிய பதிவு : உலகின் அதிவேகமான மெமரிகார்ட் (SANDISK EXTREME PRO)