Followers

Friday, September 13, 2013

பரிகாரம் செய்யும்பொழுது கவனிக்கபடவேண்டியவை


வணக்கம் நண்பர்களே!
                     என்னிடம் சோதிடம் பார்ப்பவர்களுக்கு பரிகாரத்தை பரிந்துரைக்கும்பொழுது அவர்கள் அந்த பரிகாரம் மட்டும் செய்துவிட்டு நடக்கவில்லை என்று அமர்ந்துக்கொண்டு இருக்ககூடாது. 

நீங்கள் பரிகாரம் செய்தாலும் அந்த பரிகாரத்தை செய்துவிட்டு நமது அம்மனிடம் ஒரு வேண்டுதலையும் வைத்துவிடுவது நல்லது. ஏன் என்றால் பரிகாரம் கிரகங்களுக்காக மட்டுமே செய்கிறீர்கள். கிரகத்தின் பாதிப்பு குறையும் அம்மனின் வழியாக தான் உங்களுக்கு நல்லது நடைபெறமுடியும்.

சம்பந்தப்பட்ட நபர் அம்மனிடம் வேண்டுதல் வைப்பது நல்லது. சம்பந்தப்பட்ட நபர் பரிகாரம் செய்யும்பொழுது இல்லாமல் இருக்கலாம் ஆனால் வேண்டுதல் வைப்பது என்பது சம்பந்தப்பட்ட நபர் செய்யும்பொழுது மட்டுமே நடைபெறும். ஒரு சில சிறிய விசயங்களுக்கு என்று இருந்தால் அவர்களின் இரத்த உறவினர்கள் வேண்டுதல் வைக்கலாம். ஒரு நபர் பிரபலமாக வேண்டும் என்றால் அவர் வேண்டுதல் வைக்க வேண்டும்.

ஒரு சில நபர்கள் என்னிடம் அரசியலில் பிரபலமாக வேண்டும் என்று கேட்பார்கள் அதாவது கேட்பது அவர்களின் இரத்தசம்பந்தப்பட்ட நபராக இருக்ககூடும். எனது பையன் அரசியலுக்கு ஆசைப்படுகிறான் அவன் பிரபலமான அரசியல்வாதியாக வேண்டும் என்று கேட்பார்கள் பெற்றோர்கள். 

அரசியல்வாதி மற்றும் சினிமாகாரர்கள் எல்லாம் முதலில் திராவிடக்கொள்கையோடு இருப்பார்கள். கடவுளை மறுத்து பேசுவார்கள். அவர்களின் பெற்றோர்கள் தான் சோதிடர்களை தேடி வருவார்கள். நான் அவர்களிடம் சொல்லுவது உங்களின் பையன் தனி முன்னேற்றத்திற்க்கு மட்டும் வந்தால் நீங்கள் பரிகாரம் செய்யலாம். அவன் பொதுவான ஒரு இடத்தில் நிற்பான். அவனை சூழ்ந்து மக்கள் இருப்பார்கள். இது மிகவும் கஷ்டப்பட்டு முன்னேற்றப்பட வேண்டிய ஒன்று. நீங்கள் வருவதற்க்கு பதிலாக உங்களின் பையன் என்னை வந்து சந்திக்க சொல்லுங்கள் என்று சொல்லுவேன்.

அவன் வரமாட்டேன் என்று சொல்லுகிறான் என்பார்கள். நான் அவர்களிடம் அவர் வருவதற்க்கு என்று ஒரு காலக்கட்டம் வரும் அப்பொழுது அவன் தேடி வருவான் என்று சொல்லி அனுப்பிவிடுவேன். ஏன் என்றால் சம்பந்தப்பட்ட நபர் நம்மை பார்க்கும்பொழுது மட்டுமே அவர்களை உயர்த்த முடியும். அவர்களின் உறவினர்கள் வந்து எல்லாம் ஒன்றும் செய்யமுடியாது. 

தனிநபரை சார்ந்து முன்னேற்றம் இருக்கவேண்டும் என்றால் அவர்களின் குடும்பத்தினர் பரிகாரம் செய்யலாம். மக்களை சார்ந்து முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நபர் செய்தால் மட்டுமே முன்னேற்றத்தை பார்க்கமுடியும்.

எந்த பரிகாரம் செய்தாலும் அம்மனிடம் வேண்டுதல் வைக்கும்பொழுது மட்டுமே நடைபெறும்.இதனை மறக்க வேண்டாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: