Followers

Wednesday, September 4, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 21


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசா அனைவருக்கும் புரியும்படி உள்ளது என்று எனக்கு தெரிவிக்கிறார்கள். இதற்கு காரணம் நான் ராகு தசாவை கடந்து வந்ததால் அதன் தாக்கத்தைப்பற்றி நல்ல அனுபவித்து இதனை எழுதமுடிகிறது.

ராகு தசாவில் என்ன ஒரு விஷேசமான தகவல் என்றால் அது எந்த ஒரு குருவும் இல்லாமல் தானே கற்றுக்கொள்ளகூடிய ஒரு வாய்ப்பை அளிப்பார். ராகு தசாவில் எனக்கு மாந்தீரீகம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒரு ஆர்வம் இருந்தது ஒரு குருவும் வாய்த்தார். அந்த குருவின் வழியாக கற்றுக்கொள்ளும்பொழுது அது அதிகபட்சமாக அடுத்தவர்களை கெடுப்பது போல் தான் உள்ளது. 

எனக்கு குரு கிரகம் நல்ல நிலையில் இருப்பதால் அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்ய எனக்கு மனம் அந்தளவுக்கு வரவில்லை. அதே நேரத்தில் தசாநாதனின் தயவால் அதனை கற்றுக்கொண்டேன். அதுவும் மிகப்பெரிய கடல் போன்றது தான். அதனை செயல்படுத்தி பரிகாரம் செய்துக்கொள்ளலாம். 

ஒரு சில ஜாதகங்களில் மிக மோசமாக கிரகநிலைகள் அமையும்பொழுது இதன் துணைக்கொண்டு செய்தால் அதனை சரிசெய்யமுடியும். ராகு மாந்தீரிகம் தொழிலுக்கு காரத்துவம் வகிக்கிறார். அதனால் அந்த வழியை ஏற்படுத்திக்கொடுப்பார். குரு கிரகம் ஒரு ஜாதகருக்கு நன்றாக அமையும்பொழுது கெடுதல் வேலைக்கு அவர்கள் ஈடுபடமாட்டார்கள். எனக்கு குரு கிரகம் ஜாதகத்தில் நன்றாக அமைந்ததால் கெடுதல் வேலைகளை செய்யமுடியவில்லை. மனது அதற்கு ஒத்துழைக்கவில்லை.

ராகு காரத்துவம் நன்றாக இருந்து அவர்களுக்கு தசா நடைபெற்றால் மாந்தீரிகம் அருமையாக வரும். மாந்தீரீகம் என்பது தந்திரத்தில் தான் அதிகம் உள்ளது. தந்திரத்தால் மந்திரத்தை செயல்படுத்துவார்கள். மிகச்சிறந்த தந்திரமூளைக்கு ராகு தசா சிறப்பாக உதவும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Anonymous said...

நீங்கள் கூறி இருப்பது முற்றிலும் உண்மையே.
இதைப் பூர்வஜென்ம வலு குறைந்தவர்கள்
ஒரு தற்காப்புக் கலையாக பயன்படுத்தினால்
மட்டுமே நன்மை விளையும் . தவறாகப் பயன்படுத்தினால்
மூன்று மடங்கு அவர்களுக்கே பூமராங் போலத் திரும்பும்.