Followers

Thursday, September 26, 2013

குருவிற்க்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                     எனக்கு குரு தசா ஆரம்பித்த நாளில் எனது நண்பர் ஒருவர் என்னிடம் வந்து ஒரு ஷுரடி சாய்பாபாவின் படத்தை கொடுத்தார். எனது பூஜையறையில் அந்த படம் இன்றும் உள்ளது. இருக்கின்ற படத்திலேயே பெரிய சைஸ் படம் அது மட்டுமே.

எனக்கு அப்பொழுது அந்த படத்தைப்பற்றி அந்தளவு தெரியவில்லை. இன்று அம்மனோடு அவரும் இருக்கிறார். நான் அதிகமாக சாமி படங்களை வாங்கி வைப்பது கிடையாது. நமது அம்மன் (மேல்மலையனூர் படம்), வக்கிரகாளி சென்னையில் இருப்பதால் காளிக்காம்பாள், அண்ணாமலையார் படங்கள் மட்டும் இருக்கும். 

ஒருவருக்கு குரு தசா நல்லது செய்தாலும் சரி தீயது செய்தாலும் சரி ஷிரடி சாய்பாபாவை மானசீகமாக வணங்கி வாருங்கள். உங்களுக்கு குரு தசா நல்லது செய்யும். குருவிற்க்கு நல்ல ஒரு பரிகாரம் இது.

சாய்பாபாவை வணங்கிவரும்பொழுது வியாழகிழமை மட்டும் அருகில் இருக்கும் சாய்பாபாவின் கோவிலுக்கு சென்று வாருங்கள். வியாழகிழமை அன்று வீட்டை நன்றாக சுத்தம் செய்து பாபாவிற்க்கு ஆராதனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் சாய்பாபா உங்களுக்கு வரும் தீமைகளை விலக்கி விடுவார். உங்களை காப்பாற்றுவார். 

நிறைய சாய்பாபாவின் பக்தர்கள் என்னிடம் தொடர்பு வைத்திருக்கிறார்கள். எப்படியும் மாதம் ஒரு முறையாவது ஷிரடி சாய்பாபாவின் நைவேத்தியம் அல்லது ஏதாவது ஒரு பொருளாவது என்னிடம் வந்து சேர்ந்துவிடும். இரண்டு நாள்களுக்கு முன்பு சாய்பாபாவின் 2014 காலண்டர் என்னிடம் ஒரு பக்தர் கொடுத்துவிட்டு சென்றார்.

குரு கிரகத்திற்க்கு ஒரு நல்ல பரிகாரம் சொல்லியுள்ளேன். உடனே கடைபிடியுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: