Followers

Wednesday, September 25, 2013

தொழில் செய்யும் நண்பர்களின் கவனத்திற்க்கு


வணக்கம் நண்பர்களே!
                    தொழில் செய்பவர்களுக்கு என்று ஒரு உதவி செய்வதை ஆரம்பித்து வைத்தோம் அதில் பல நண்பர்கள் பயன்பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். யாரிடமும் நான் இவ்வளவு தான் நீங்கள் தரவேண்டும் என்று சொன்னதில்லை. இன்று பல பேர்கள் நல்ல நிலைக்கு உயர்ந்துக்கொண்டு வருகிறாரகள்.

இப்பொழுது தொழில் செய்பவர்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் அவர்களுக்கு தொழிலில் வெற்றி பெறுவதற்க்கான வாய்ப்பே இல்லை என்பது அவர்களே பார்த்து தெரிந்துக்கொள்ள முடியும். அப்படி இருந்தும் அவர்கள் இன்று உயருவதற்க்கு யார் காரணம் என்று சொன்னால் அம்மன் தான். இப்பொழுது தொழில் செய்பவர்கள் இதனை மறுத்து பேசமாட்டார்கள். 

இதனை அவர்கள் சோதனை செய்ய வேண்டும் என்றாலும் என்னிடம் சொன்னால் சோதனை செய்யது பார்க்கலாம். ஒரு நாள் அம்மனை அவர்களின் தொழிலில் இருந்து வெளியில் வரச்சொன்னால் அவர்கள் எதில் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவரும். 

நான் இந்த தொழில் செய்பவர்களிடம் ஜாதகத்தை வைத்து செய்யவேண்டும் ஜாதகத்தை பார்க்கவேண்டும் என்று சொன்னால் அவர்களின் பதில் இப்பொழுது இது எல்லாம் வேண்டாம். எனக்கு ஏதோ வியாபாரம் நடந்தால் போதும் என்று சொல்வார்கள். இது எதனால் அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால் இவர் ஜாதகத்தை கேட்டால் பணம் கேட்பார் என்ற எண்ணம்.

உண்மையில் அவர்களிடம் ஜாதகம் கேட்பது அவர்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்க்காக மட்டுமே. பணம் என்பதை எதிர்பார்த்து செய்வதற்க்கு அல்ல. ஒரு லிமிடோடு எனக்கு போதும் என்று வருபவர்கள் தயவு செய்து வராதீர்கள். மிகப்பெரிய சக்தியை தேவையில்லாமல் உங்களுக்கு செலவு நான் தேடி கண்டுபிடிக்கவில்லை. மிகப்பெரிய ஆளாக வருபவர்களுக்கு தான் இதனை நான் செய்யமுடியும்.

சம்பந்தமே இல்லாமல் உங்களுக்கு ஒரு தெய்வம் வேலை செய்யும்பொழுது கொஞ்ச நாள் பார்க்கும் திரும்பி என்னிடம் வந்துவிடும். அதற்கு நான் பொறுப்பு ஆகாமுடியாது. மீண்டும் சொல்லுவது ஒரு சாதாரண தொழில் செய்பவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்க்காக தான் நான் வேலை செய்யமுடியும். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்க்குள் நிற்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தயவு செய்து வரவேண்டாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...