Followers

Sunday, September 1, 2013

நல்ல நாள்


வணக்கம் நண்பர்களே!
                    நமது மதத்தில் எந்த நிகழ்வையும் நாள்களை பார்த்து தான் வைப்பார்கள். நல்ல நாளை பார்த்து தான் வைக்கவும் வேண்டும். ஒரு சிலர் என்ன செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எந்த நாள் எளிதாக இருக்கிறதோ அந்த நாளை வைத்துக்கொள்ளுவது.

கிராமங்களில் ஒரு ஐயர் மட்டும் இருப்பார். அவருக்கு எந்த நாள் வேலை இல்லாமல் இருக்கின்ற நாளை பார்த்து இந்த நாளில் நடத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லுவார். மக்களும் அந்த நாளை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அந்த நாளை பார்த்தால் விசேஷம் நடத்துபவர்களுக்கு சந்திராஷ்டமாக இருக்கும். 

சந்திராஷ்டமம் மிக மோசமான ஒரு நாள். அந்த நாளில் இவன் திருமணம் அல்லது வீடுகுடிபுகுந்தால் எப்படி இருக்கும் மோசமாக தான் இருக்கும். இவனுக்கு அந்த நாள் தான் இவனே தேடிய மிகப்பெரிய ஆப்பாக கூட இருக்கலாம். உங்களின் ஜாதகத்தை வைத்து அந்த நாளை தேர்ந்தெடுக்கவேண்டும்.

கடவுளுக்கு விஷேசமான நாளில் திருமணம் வீடுகுடிபோகுதல் போன்ற நிகழ்வை வைப்பதும் கூடாது. அன்றைய நாளில் முகூர்த்தம் என்று குறிப்பிட்டு இருந்தாலும் அந்த நாளில் தவிர்ப்பது நலம். கடவுளுக்கு தான் விஷேச நாட்களை தவிர மனிதர்களுக்கு அது கிடையாது. கடவுளுக்கு விஷேச நாளில் கடவுளை தான் கொண்டாடவேண்டுமே தவிர உங்களுக்கு கிடையாது.

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று பார்த்தால் ஏகாப்பட்ட திருமணம் நடைபெறுகிறது. இதனை எல்லாம் தவிர்ப்பது நலம். நாளை வைத்து தான் ஒரு காரியம் வெற்றி அடையுமா தோல்வி அடையுமா என்று பார்க்கமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: