Followers

Sunday, September 29, 2013

உடனே செய்ய வேண்டியவை


வணக்கம் நண்பர்களே !
                    ஆன்மீக அனுபவங்கள் மற்றும் நம்பினால் நம்புங்கள் பதிவை எல்லாம் எழுதுவது இதனை படித்துவிட்டு நீங்கள் இந்த பயிற்சியை ஒருவராவது முயற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்னிடம் போன் செய்து நீங்கள் இன்னமும் பயிற்சி செய்து மேலை வாருங்கள் என்று சொல்லுகிறார்கள். நான் மேலை வருவது இருக்கட்டும் நீங்கள் நான் எப்படி இப்படி எல்லாம் செய்ய போகின்றேன் என்று எண்ண வேண்டும்.

பல நண்பர்கள் இதனை எங்களுக்கு கற்று தாருங்கள் என்று சொல்லுகிறார்கள். கற்று தரும் நிலையில் நான் இப்பொழுது இல்லை அதற்கு என்று காலம் வரும்பொழுது ஜாதககதம்பத்தில் அறிவிப்பு வரும். அந்த காலம் நீண்டநாள்களாக கூட இருக்கலாம். 

உங்களின் காலத்தை வீணடிக்காமல் உடனே ஒரு குருவை நாடி கற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் வீணாக காலத்தை தள்ளாமல் கற்றுக்கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் உயரவேண்டும்.

இவ்வளவு நாட்கள் நான் எழுதிக்கொண்டு இருக்கின்றேன். ஒருவர் கூட நான் இந்தளவுக்கு செய்துக்கொண்டு உள்ளேன் என்று என்னை தொடர்புக்கொண்டு சொன்னது கிடையாது. ஆன்மீகத்தில் ஒவ்வொரு படியும் தாண்டி வந்துக்கொண்டு இருக்கின்றேன் என்று சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன் ஒருவரும் அப்படி வரவில்லை.

என்னை தொடர்புக்கொண்டு கேட்பது மட்டுமே வேலையாக கொண்டு இருக்கிறார்கள். என்னிடம் கொடுக்ககூடிய தகுதி இருந்தால் உங்களிடம் தந்துவிடுவேன். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்துவிடுவேன். இப்பொழுது இருக்கும் நிலையில் வரும் நபர்க்கு பிரச்சினையை தீர்க்க வேண்டும் அது மட்டுமே என்னால் முடியும். ஆன்மீகத்தை அடுத்தவர்களுக்கு தருவதற்க்கு இன்னமும் தகுதி இல்லை.

இப்பொழுது உள்ள நிலையில் பூர்வபுண்ணியத்தோடு தொடர்புடையவர்களுக்கு மட்டும் தரமுடியும். ஒருவர் வந்துவிட்டு சென்றுவிட்டார். வேறு யார்க்கும் தரவில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: