Followers

Saturday, September 14, 2013

கடனும் தொழிலும்


வணக்கம் நண்பர்களே!
                     பல நண்பர்கள் இப்பொழுது சோதிடம் பார்க்க வருவது கடன் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பதற்க்காக மட்டுமே. இதனை பார்த்து நான் ஒரு புறம் கஷ்டப்பட்டாலும் மறுபுறம் அவர்கள் நடந்துக்கொள்ளும் நேர்மையை நினைத்து பெருமை கொள்கிறேன். அவன் அவன் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை எடுத்து வங்கியை ஏமாற்றிவிட்டு வெட்கம் இல்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கும்பொழுது சில லட்சங்களை கடனாக பெற்று எப்படியும் அதனை திருப்பி தரவேண்டும் என்று நினைப்பவர்களை பாராட்டி தான் தீரவேண்டும்.

பல பேர்கள் கடன் பெற்றதற்க்கு காரணம் அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கி அதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனாளியாக மாறுகிறார்கள். ஒரு தொழில் தொடங்குவது என்பது தன்னுடைய அனுபவம் அதில் இருந்தால் தொழில் தொடங்கலாம். அந்த தொழிலில் அனுபவம் இல்லாமல் கடன் வாங்கி தொழில் தொடங்கினால் மாட்டிக்கொள்வீர்கள். பல பேர் பார்க்கும்பொழுது பிறர் அந்த தொழில் செய்து நன்றாக இருக்கிறார்கள் அதனால் நான் இந்த தொழில் தொடங்குகிறேன் என்று புதிய தொழிலை தொடங்கும்பொழுது மாட்டிக்கொள்கிறார்கள். அந்த தொழில் அவருக்கு நன்றாக போகும் உங்களுக்கு அந்த தொழில் நன்றாக செல்லாது. உங்களின் நிலை என்னவாகும் என்பதை ஜாதகத்தை வைத்து பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

ஒரு தொழில் தொடங்கினால் உங்களின் குடும்பத்தில் இருப்பவர்களின் அத்தனை ஜாதகத்தையும் பார்க்கவேண்டும். அதில் யாருடைய ஜாதகத்தில் நல்ல நிலையில் கிரகங்கள் இருக்கின்றதோ அவர்களின் பெயரில் தொழில் தொடங்கவேண்டும்.ஒரு தொழில் நன்றாக போய்க்கொண்டிருந்தால் அதில் முழு கவனத்தையும் அதில் செலுத்திக்கொண்டே இருக்கவேண்டும் எந்த நேரத்திலும் கீழ் நோக்கி வரலாம்.

சோதிடர்களாகிய உங்களின் கவனத்திற்க்கு

ஒருவர் உங்களை தேடி தொழில் செய்யவேண்டும் அதற்கு என் ஜாதகத்தில் வழி இருக்கின்றதா என்று கேட்டால் அவரின் ஜாதகத்தை வைத்து உங்களுக்கு தெரிந்த விதியை வைத்து ஆராய்ந்துவிட்டு அவர்க்கு தொழில் செய்யமுடியும் என்றால் தொழிலை தொடங்க சொல்லுங்கள்.

அவரின் ஜாதகம் தொழில் தொடங்க இடம் கொடுக்கவில்லை என்றால் அவரின் குடும்பத்தில் உள்ள நபர்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதில் வழி இருக்கின்றதா என்று பார்த்துவிட்டு அவர்க்கு தொழில் தொடங்க சொல்லவேண்டும். தேடி பார்த்தால் ஏதாவது ஒரு ஜாதகத்தில் அதற்கு வழி கிடைக்கும். ஏன் என்றால் இறைவன் கருணை உடையவன். அந்த தொழில் வழியாக அவர்கள் வாழமுடியும் அதனால் ஏதாவது ஒருவரின் ஜாதகத்தைக்கொண்டு அந்த குடும்பத்தை பிழைக்க வைக்கமுடியும்.

கிரகங்கள் தன் வேலையை செய்துக்கொண்டு தான் இருக்கும். அதன் பிடியில் இருந்து மாற்ற இறைவனால் முடியும். அதனால் சோதிடத்தை நன்றாக அலசி பார்த்தால் அவர்களை தொழிலில் வெற்றி பெற வைக்கமுடியும்.

நீங்கள் தொழில் என்று வந்தால் உடனே பத்தாவது வீட்டை வைத்து ஆராய்ந்து பதிலை சொல்லுவீர்கள். நான் பத்தாவது வீட்டை வைத்து சொன்னாலும் ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் உச்சத்தில் இருக்கின்றது என்பதை பார்த்து தான் தொழிலை சொல்லுவேன். உச்சத்தில் இருக்கும் கிரகத்தை வைத்து தான் அவர்களின் தொழிலை உயர்த்தமுடியும்.தொழில் நன்றாக அமைத்துக்கொடுக்கவேண்டியது நமது கடமை அதனை செய்துவிட்டால் ஒருவர் ஏன் கடன் வாங்கபோகிறார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

KJ said...

Thanks sir... Uccham pretra Sani 10il..tenth place owner sukran at 12 with sani aspect.. Which business will suit for this placement.

rajeshsubbu said...

வணக்கம் KJ முழுஜாதகத்தை பாருங்கள். பார்த்துவிட்டு பலனை நாம் சொல்லவேண்டும். நன்றி