Followers

Monday, September 2, 2013

தொழில் ஆசை


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் ஒரு பிஸினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை எழுவது இயற்கை.

ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்னும் பொழுது உங்களின் ஜாதகத்திற்க்கு அந்த தொழில் ஏற்றது தானா என்று பார்த்து தொடங்கவேண்டும் அதே நேரத்தில் அந்த தொழிலைப்பற்றி நன்றாக தெரிந்து இருக்கவேண்டும். ஜாதகத்திற்க்கு ஏற்றதாக இருந்தால் அந்த தொழில் கைகொடுக்கும். அதே நேரத்தில் நீங்கள் தொழில் தொடங்குவதற்க்கு அந்த நேரம் ஏற்ற நேரமாக இருக்கின்றதா என்று பார்த்து தொழில் தொடங்கவேண்டும்.

பல பேர்கள் பல கடைகளை பார்த்துவிட்டு நாமும் இதைபோல் தொடங்கவேண்டும் என்று நினைத்து ஏதாவது ஒரு தொழிலை தேர்வு செய்து கடன் வாங்கி தொழிலை தொடங்குகிறார்கள். அது ஒரு சில மாதங்களிலேயே நஷ்டத்தை தழுவிவிடும். கடனையும் கட்டமுடியாமல் நீங்களும் அல்லல்படவேண்டிவரும்.

பல கடைகள் நல்ல முறையில் வியாபாரம் நடைபெறுவதற்க்கு என்று பல காலங்கள் தாக்கிபிடித்து நின்ற பிறகு தான் வெற்றி பெற்று இருப்பார்கள். பல காலங்கள் தாக்கி பிடிப்பதற்க்கு அவர்களுக்கு பணம் இருக்கும். அதனை நீங்கள் கவனத்தில் கொண்டு புதிய தொழிலை ஆரம்பிக்கவேண்டும். 

ஜாதகத்தில் இல்லாத தொழில்களை கூட நீங்கள் தொடங்கி வெற்றி பெறமுடியும் அதற்கு எங்களை போல் உள்ள ஆட்கள் உங்களுக்கு உதவி செய்யவேண்டும். அப்படி உதவி செய்தால் எளிதில் அந்த தொழில் வெற்றி பெற்றுவிடும். 

ஒன்பது கிரகங்களின் காரத்துவத்தை எப்படி வேண்டுமானாலும் பெறமுடியும். அதற்கு தகுந்த சோதிடர் உங்களுக்கு உதவினால் நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அந்த தொழிலில் நம்பர் ஒன்று தான்.

நமது தளத்திற்க்கு வரும் நண்பர்களுக்கு இப்பொழுது செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இதனை அளவு வைத்து தான் செய்கிறேன். முழுமையாக செய்யவில்லை அவர்கள் நடந்துக்கொள்ளும் விதத்தை பார்த்து படிப்படியாக மிக உயரத்தில் கொண்டு செல்வேன்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: