Followers

Tuesday, September 3, 2013

நிலபிரச்சினை


வணக்கம் நண்பர்களே!
                    நமது தளத்திற்க்கு வரும் நண்பர்கள் அவர்களின் நிலவிசயமாக பலபேர் என்னை தொடர்புக்கொள்கிறார்கள். நிலத்தை வாங்கி போட்டுவிட்டு அதனை விற்கமுடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த பிரச்சினை அதிகமாக பேர்களுக்கு உள்ளது.

இந்த பிரச்சினையை சரிசெய்துக்கொடுங்கள் என்று என்னை நாடுகிறார்கள். எந்த ஒரு நிலபிரச்சினையை எடுத்தாலும் அந்த பிரச்சினையை சரிசெய்தவற்க்கு நீண்ட காலம் தேவைப்படும். அதற்கு பூஜை செய்வதற்க்கே பல ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட வேண்டும். 

நான் பூஜை செய்யவேண்டியுள்ளது இருபதாயிரம் கொடுங்கள் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் ஆகா நம்மை வைத்து இந்த மாதத்தை ஒட்டுவதற்க்கு வழி செய்துவிட்டார் என்று நினைப்பீர்கள். சின்ன சின்ன பிரச்சினைக்கு முதலில் என்னை தொடர்புக்கொண்டு செய்துக்கொள்ளுங்கள். கொஞ்ச நாட்கள் சென்றுவிட்டால் என்மீது நம்பிக்கை வரும் அப்பொழுது நீங்கள் இந்த மாதிரியான பிரச்சினை எல்லாம் செய்துக்கொள்ளலாம்.

எனக்கு தெரிந்த மிகவும் நெருங்கிய வட்டத்திற்க்கு மட்டும் இதனை செய்துக்கொடுக்கிறேன். அவர்கள் என் மீது உள்ள நம்பிக்கை அப்படிபட்டது. முதலில் நீங்கள் வந்து என்னை நிலப்பிரச்சினைக்கு சந்தித்தால் நான் ஏற்றுக்கொள்வதில்லை அவ்வளவு வேலை அதில் செய்யவேண்டிவரும்.இதற்கு எல்லாம் உங்களுக்கு பொறுமையும் இருக்காது பணமும் இருக்காது.

நண்பர்களே வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்றே நமது அம்மனின் பூஜையும் வைத்திருக்கிறேன். நீங்கள் வேண்டுதல் வைத்து அது நடந்திருந்தால் நீங்களும் பூஜைக்கு பணம் அனுப்பலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: