Followers

Sunday, September 1, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 15


வணக்கம் நண்பர்களே!
                    ஒருவருக்கு ராகு தசா ஆறாவது வீட்டில் இருந்து நடைபெறும்பொழுது எப்படிபட்ட வில்லன்களை அனுப்புவார் என்பதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

ஆறாவது வீட்டு அதிபதி லக்கினத்தில் தொடர்புக்கொண்டால் இவருக்கு வில்லன் இவரே தான். எப்படி அவருக்கு அவரே வில்லனாக வரமுடியும் என்று கேட்கிறீர்களாக மனரீதியாக பிரச்சினை கிளப்பி அவரே அவருக்கு ஆப்பு வைத்துக்கொள்வார்.

ஆறாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் தொடர்புக்கொண்டால் இவரின் குடும்பத்தில் உள்ளவர்களே அவருக்கு வில்லன்களாக உருவாக்கி தொந்தரவுக்கொடுப்பார்கள். இவரின் வாயால் சண்டை உருவாகிவிடும். 

ஆறாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெற்றால் இளைய சகோதர சகோதரிகள் இவருக்கு வில்லன்களாக வந்துவிடுவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் அமர்ந்து ராகு தசா ந்டைபெற்றால் பெற்ற தாய் வழியில் உள்ளவர்கள் இவர்க்கு எதிரியாக வந்துவிடுவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெற்றால் முன்ஜென்ம பகையில் உள்ளவர்கள் எதிரியாக வந்துவிடுவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெற்றால் நோய் மற்றும் அந்தவீட்டின் காரத்துவம் உள்ளவர்கள் எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெற்றால் மனைவி மற்றும் மனைவியின் வழியில் உள்ளவர்கள் எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெற்றால் மரணம் நடந்த வீட்டில் சண்டை ஏற்பட்டு அதில் உள்ளவர்கள் எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெற்றால் தந்தை தந்தை வழியில் உள்ளவர்கள் எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெற்றால் வேலை செய்யும் இடத்தில் இருந்து எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி பதினோராவது வீட்டில் இருந்து ராகு தசா நடைபெற்றால் மூத்த சகோதர சகோதரிகள் வழியில் உள்ளவர்கள் எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் நின்று ராகு தசா நடைபெற்றால் பெண்கள் வழியில் எதிரிகள் வருவார்கள்.

இதில் உள்ள வில்லன்கள் ராகு தசா நடைபெறும் காலத்தில் உங்களுக்கு வில்லன்களாக வருவார்கள். ராகு என்பதால் அனைத்தையும் நேருக்கு நேர் தாக்காமல் மறைந்து தாக்குவார்கள். ராகு தசா ஆறாவது வீட்டில் இருந்து நடைபெறும் பொழுது எச்சரிக்கையுடன் இருந்துக்கொள்ளுங்கள்

பரிகாரம்
        இவர்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள உக்கிரதேவதைகளை வணங்கவேண்டும். பதினெட்டு வருடங்கள் விடாமல் தொடர்ந்து வணங்கிவாருங்கள். பல தடைகளை ஏற்படுத்தினாலும் விட்டுவிடாமல் வணங்கிவந்தால் நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: