Followers

Friday, September 27, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே !
                    பொதுவாக ஆன்மீகத்திற்க்கு என்று வருவதற்க்கு முன்பு ஒரு சில நிகழ்வுகள் நடந்தது. அதனைப்பற்றி உங்களிடம் சொல்லவேண்டும் என்று தோன்றியது. எனக்கு கனவில் அதிகமான பறப்பது போன்று கனவு வந்தது. அந்த கனவு எனக்கு அடிக்கடி வரும். அப்படி கனவு வரும்பொழுது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். 

நான் தூங்கும்பொழுது எனது உடலை யாரோ தூக்கி போடுவது போல் இருக்கும். இதனை எனது அருகில் இருப்பவர்களும் பார்த்து இருக்கிறார்கள். நன்றாக தூங்கும்பொழுது அந்த உடல் அதுவாகவே தூக்கி போடும். நான் முழித்துக்கொள்வேன்.

இப்படி நடப்பது எல்லாம் எனக்கு அப்பொழுது ஒன்றும் தெரியாது. ஏண்டா இப்படி எல்லாம் நடைபெறுகிறது என்று நினைக்க தோன்றும். வறுமை வந்தால் எல்லாம் சேர்ந்து வந்துவிடும் என்று நினைத்தேன். நாட்கள் ஆக ஆக தான் இதனைப்பற்றி தெரிந்தது.

ஒருவர் கனவில் பறக்கிறது போல் கனவு கண்டால் அற்புதமான மந்திரங்களை அவர் கற்கபோகின்றார் என்று அர்த்தம். மிகச்சிறந்த யாருக்கும் கிடைக்காத மந்திரங்களை அவர் கற்கபோகின்றார் என்று தான் அர்த்தம்.

தூங்கும்பொழுது உடல் தூக்கிபோடுவது என்பது உக்கிரதெய்வங்கள் அவரிடம் வாசம் செய்யபோகின்றது என்று அர்த்தம்.உங்களுக்கும் இதுபோல் நடந்தால் நீங்களும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையலாம்.

இது எல்லாம் நடக்காமல் கூட ஆன்மீகத்தில் முன்னேற முடியும். எனக்கு நடந்தை சொல்லுகிறேன்.

நம்பினால் நம்புங்கள் 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: