Followers

Friday, September 13, 2013

தொழில் செய்பவர்களே


வணக்கம் நண்பர்களே!
                    நமது ஜாதககதம்பம் வழியாக வரும் தொழில் செய்யும் நண்பர்களுக்கு என்று உதவி செய்து வருகிறேன். இவர்களுக்கு நான் உதவி செய்தாலும் இவர்கள் என்னை முழுமையாக பயன்படுத்த தெரியவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

வருபவர்களுக்கு ஒரு வேளை கூச்ச சுபாவம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பல பேர் கேட்க தயங்குகிறார்கள். என்னிடம் வருபவர்கள் என்னை நன்றாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் அவர்களுக்கு என்னை பயன்படுத்த தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு தொழில் செய்தால் அந்த தொழிலில் திட்டம் வகுப்பது மிகப்பெரிய செயல். அனைத்தும் திட்டம் படி செய்தால் மட்டுமே அந்த தொழிலை நடத்தமுடியும். பல பேர் ஏனோ தானோ என்று நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.அம்மன் உதவி செய்தாலும் நீங்கள் சரியான முறையில் திட்டம் தீட்டிக்கொண்டு செயல்படுங்கள். அப்பொழுது தான் எளிதாக வெற்றி பெறமுடியும்.

தற்சமயம் அம்மன் மட்டும் தான் உதவி செய்யும். அம்மனின் உதவி ஒரளவு மட்டும் தான் கிடைக்கும். ஒரு காலத்திற்க்கு பிறகு நான் உங்களிடம் உங்களின் ஜாதகத்தை கேட்பேன். அந்த ஜாதகத்தில் நான் செய்யும் வேலை தான் உங்களை மிக உயர்ந்த அளவில் உயர்த்தும்.

இந்தியா முழுவதும் நடந்து பல சாமியார்களிடம் பயின்று வந்து பல விசயங்கள் என்னிடம் இருக்கின்றது. அதனை எல்லாம் பயன்படுத்தாலும் என்று பார்த்தால் ஒரு நல்ல தொழில் செய்பவர்கள் வரவேண்டும் அப்பொழுது அதனை வெளிப்படுத்த முடியும். என்னிடம் இருந்து ஒரு சதவீதம் மட்டும் தான் வெளிப்பட்டு இருக்கின்றது.

தற்சமயம் பதிவில் இருந்து வந்த தொழில் செய்யும் நண்பர்களிடம் ஜாதகத்தை ஒரு சிலரிடம் வாங்கி வைத்திருக்கிறேன். அதனை ஒன்றும் செய்யவில்லை. நான் அவர்களின் ஜாதகத்தை கையில் எடுப்பதும் எடுக்காததும் அவர்களின் செயலில் இருக்கின்றது.

நான் உங்களுக்கு செய்வதற்க்கு தயார். ஆனால் நீங்கள் செயல்படவேண்டும். சும்மா உட்கார்ந்துக்கொண்டு தொழில் செய்கிறேன் என்று உட்கார்ந்துவிட்டால் நான் ஒன்றும் செய்யமுடியாது.என்னுடைய சிந்தனை உங்களின் பக்கம் திரும்ப வேண்டும் அப்பொழுது உங்களுக்கு மிகப்பெரிய பலம் வாய்ந்த ஒரு சக்தி கிடைத்தது போல் இருக்கும்.பயன்படுத்த பாருங்கள் நண்பர்களே.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: