Followers

Sunday, September 29, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 43


ணக்கம் ண்பர்களே !
                    ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். ராகு தசாவில் சுக்கிரபுத்தியை பார்த்தோம். 

ராகு தசாவில் சுக்கிரபுத்தி என்பது மூன்று வருட காலங்கள் நடக்கும். சுக்கிரன் நல்ல நிலைமையில் இருந்தால் எப்படி பலனை தரும் என்பதைப்பற்றி பார்க்கலாம்.

திருமணம் நடைபெறும். தனலாபம் வரும். பெண்களின் வழியில் வருமானம் வரும். பெண்களின் வழியில்வருமானம் வரும்.தவறான உறவு மூலம் ஒரு சிலருக்கு பெண்களி்ன்  வழியில் கூட பணவரவு இருக்கும். 

புதிய வீடுகளை கட்டகூட இந்த காலத்தில் முடியும். திடிர் என பணவரவு ஏற்பட்டு புதிய வீடுகளை வாங்கும் யோகம் கூட அமையும். அனைவரும் ஆசைப்படுகின்ற மாதிரி வீடு இருக்கும்.

அனைவருக்கும் அன்னதானம் செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு கோவில்களில் அன்னதானத்தை நடத்துவார்கள். குரு கிரகத்திற்க்கு போட்டியாக இவரும் செய்வார். இவரின் கோவில் பூசாரிகளை கொண்டு வழிப்படும் கோவிலாக பார்த்து அன்னதானம் செய்யவைப்பார்.

அரசாங்க வழியில் நல்ல மரியாதை கிடைக்கும். ராஜாங்க சிம்மாசனம் கிடைக்கும். அரசியலில் ஏதாவது பதவி கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளலாம்.

பெண்களின் வழியில் இன்பம் கிடைக்கவும் செய்வார். பல பெண்கள் உங்களை கூர்ந்து கவனிக்க வைப்பார்.  சின்ன வயதில் இந்த புத்தி நடைபெறும்பொழுது பெண்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ராகுதசாவில் சுக்கிரன் நன்றாக இருந்து புத்தி நடைபெற்றால் உங்களுக்கு வாரி வழங்குவார். மொத்தத்தில் நன்றாக இருக்கும்.

உங்களுக்காக ஒரு நல்ல விசயம் ஒரு அம்மனின் படத்தை கீழே  தந்து இருக்கின்றேன் வணங்கிவிட்டு செல்லுங்கள்.








ராஜராஜேஷ்வரி அம்மன்



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: