Followers

Monday, September 23, 2013

ராகு தசா கெட்ட எண்ணங்கள்


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவில் உட்பிரிவாக மாந்தீரிகம் பற்றி வந்ததால் அதனைப்பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம். மாந்தீரிகம் என்று சொன்னவுடன் நாம் நினைவுக்கு வருவது கேரளா தான் ஆனால் மாந்தீரிக உலகின் முதல் இடத்தை பிடிப்பவர்கள் கல்கத்தா தான் நமக்கு அண்டை மாநிலம் கேரளா என்றவுடன் அதனைப்பற்றி மட்டும் தெரிகிறது.

மாந்தீரிகத்தில் நாம் நல்ல தெய்வங்களை எடுப்பது போல் அவர்களும் தேவதைகளை எடுப்பார்கள். அந்த தேவதை உதவியுடன் தான் மாந்தீரிகம் செய்வார்கள். அனைத்து வேலைக்கும் தேவதை துணை வேண்டும். நாம் எடுப்பது நல்ல தேவதைகள் என்றால் மாந்தீரிகத்திற்க்கு கெடுதல் தேவதைகளை எடுப்பார்கள்.

மாந்தீரிகம் எல்லாம் இந்த காலத்தில் இல்லை என்று சொன்னாலும் அதிகமாக இந்த காலத்தில் இந்த வேலைகள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றது. வெளியில் சொல்லாமல் செய்கின்றனர். கல்கத்தாவில் ஏன் இந்த தொழில் முதலிடத்தில் இருக்கின்றது என்றால் கல்கத்தா காளியின் சக்தியால் மட்டுமே இந்த தொழில் நடத்துகின்றனர். மிகவும் கோபமான ஒரு தெய்வம் கல்கத்தா காளி. அதன் துணைக்கொண்டு இதனை அங்கு செய்கின்றனர். கல்கத்தா காளியின் உக்கிரத்தை தணிக்கவில்லை அந்த உக்கிரத்தை கொண்டு செய்கின்றனர். 

கேரளாவில் பல உபதேவதைகள் வைத்துக்கொண்டும் செய்கின்றனர். மற்றும் கெடுதல் தரும் ஆத்மாக்களை கொண்டும் செய்கின்றனர். ஆத்மாவின் உதவியோடு செய்வதால் அவர்களின் வேலை சொன்ன நேரத்தில் நடத்திக்கொடுக்கிறார்கள்.நம் மதத்தில் மட்டும் இல்லை அனைத்து மதத்திலும் இது இருக்கின்றது.

முஸ்லீம் மதத்தில் நூர்ஜாக ஜீன் என்ற ஒன்றை வைத்து செய்கிறார்கள்.. உருவமற்ற ஒன்று. கெடுதல் தரும் ஆவிகள் என்ற கூட சொல்வார்கள்.

இந்த வேலைகள் அனைத்திற்க்குமே காரணம் ராகு தான். நேர்மறையாக ராகு சுற்றாமல் எதிர்மறையாக சுற்றுவதால் இந்த எண்ணம் ஏற்படுவதற்க்கு காரணமாக இருக்கலாம். நல்ல எண்ணத்திற்க்கு பதிலாக தீய எண்ணங்கள் உருவாகின்றது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: