Followers

Monday, September 30, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 44


வணக்கம் நண்பர்களே !
                     ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். ராகு தசாவில் சுக்கிரபுத்தியை பற்றி பார்த்துவந்தோம். சுக்கிரன் ஒருவருக்கு சரியில்லை என்றால் ராகு தசா சுக்கிரபுத்தி நடைபெறும்பொழுது என்ன பலன் என்று பார்த்துவிடலாம்.

முதலில் துணைவர் வழியில் பிரச்சினையை சந்திக்க நேரிடும். துணைவருக்கு ஆயுள் பங்கம் கூட ஏற்படும். பிள்ளைகளுக்கும் பிரச்சினை தான் ஏற்படும். தனவரவு அந்தளவுக்கு நன்றாக இருக்காது.

பெண்களால் பிரச்சினை ஏற்பட்டு அந்த பிரச்சினைக்கு அவமானம் ஏற்பட செய்யும். ஒரு சிலருக்கு காவல்நிலையம் கூட செல்ல வைத்துவிடும்.

பெண்களால் நோய் தொற்று ஏற்பட்டுவிடும். ஒரு சிலருக்கு எயிட்ஸ் நோய் எல்லாம் கூட இந்த காலத்தில் தான் வரும். அந்தரங்க விசயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

சுகமான வாழ்க்கைக்கு பங்கம் ஏற்பட்டுவிடும். எதாவது ஒரு இடத்தில் படுக்க வைத்துவிடுவார். ஊர்வன இனங்கள் வாசம் புரியும் இடத்தில் தங்கவைத்துவிடுவார்.அரசாங்க வழியில் மரியாதை கிடைக்காது. அரசாஙக வழியில் பிரச்சினையை ஏற்படுத்திவிடுவார். தனவரவிலும் பிரச்சினை ஏற்பட்டுவிடும்.

நிலங்கள் உங்களை விட்டு பறிபோகும். வீட்டு வேலை நடக்காது. கட்டிடம் கட்டும்பொழுது பாதியிலேயே நின்றுவிடும். அதனை முடிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். 

காதல் தோல்வி ஏற்பட்டுவிடும். இந்த புத்தி முழுவதும் சொல்லமுடியாத துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: