Followers

Monday, September 16, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 31


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். தொடர்ச்சியாக இந்த பதிவிலும் பார்க்கலாம்.

ராகு தசா சனி புத்தியை பற்றி பார்ப்போம். இரண்டும் ஏகாப்பொருத்தம் இருந்தாலும் அமரும் இடத்தைபொருத்து நல்லது செய்யும். அவரும் கெடுதல் கிரகம் இவரும் கெடுதல் கிரகம் இரண்டு பேரும் சேர்ந்து நல்லது செய்வார்கள். எப்படி நல்லது செய்வார் என்று சொல்லுகிறீர்களா தசாநாதருக்கும் புத்திநாதருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கவேண்டும் அப்படி இருந்தால் தான் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நல்லதை செய்யமுடியும்.

ராகு தசாவில் சனி புத்தியின் காலஅளவு 2 வருஷம் 10 மாதம் 6 நாட்கள் ஆகும். இதுவும் ஒரு நீண்ட காலம் தான் மூன்று வருடங்கள் என்றே வைத்துக்கொள்ளலாம். ஒருவரை ராகு தூக்கிவிடுவதற்க்கு ராகுக்கு கண் இமைக்கும் நேரம் போதும். கொட்டிக்கொடுத்துவிட்டு போய்விடுவார். மூன்று வருட காலங்கள் அவர்க்கு அதிகபட்சமான நாட்கள் தான். 

இந்த காலகட்டத்தில் ஒருவர் நல்லவராக இருப்பதை விட கெட்டவர்களாக தான் மாறுவார்கள்.நேர்வழியில் இல்லாமல் தவறான வழியில் சம்பாதிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஒருவர் நல்ல குடும்பத்தில் பிறந்தவராக இருந்தால் அவர் தீயவழிக்கு செல்லமாட்டார்கள். எத்தனை சோதனை வந்தாலும் தீயவழிக்கு செல்லமாட்டார்கள். அவர்களை கிரகங்கள் ஒன்றும் செய்யமுடியாது.

ஒருவரின் கலாச்சாரத்தை வைத்துக்கொண்டு தான் கிரகங்கள் வேலை செய்யும். கலாச்சாரம் மாறிவிட்டால் அந்த கலாச்சாரத்திற்க்கு தகுந்த மாதிரி கிரகங்களும் வேலை செய்யும்.

ராகுவின் தாக்குதல் எல்லாம் ஒரு சில காலகட்டங்கள் வரை தமிழ்நாட்டில் தாக்குதல் அதிகம் இல்லை இன்று புதிய கலாச்சாரங்களை மக்கள் விரும்புவதால் ராகுவின் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இன்றைக்கு எப்பேர்ப்பட்ட குடும்பத்தில் உள்ள நல்லவர்களும் கெட்டுவிடுகிறார்கள். ஊரே உருப்படாமல் போகும்பொழுது இவன் மட்டும் ந்லலவனாக இருந்து என்ன செய்ய போகிறான் என்று ராகு நினைத்திருக்ககூடும்.

மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து தான் இருக்கவேண்டும். இந்த சார்ந்த கொள்கைகளால் தான் மொத்தமாக பாதிப்புக்குள்ளாகிறார்கள். தொடர்ந்து பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: