Followers

Sunday, September 1, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 17


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். தொடர்ச்சியாக இந்தபதிவிலும் ராகு தசாவைப்பற்றி பார்ப்போம்.

ராகு தசாவில் சுயபுத்தி என்ன செய்யும் என்று பார்க்கலாம்.

எந்த ஒரு சுயபுத்தியும் நல்லதை தரக்கூடாது என்று சொல்லுவார்கள். அது நல்லதை தருமா கெடுதலை தருமா என்பதை யார் நிர்பந்திக்கமுடியும். கொடுப்பதை கொடுக்கதான் செய்யும். ஒரு சில ராசிகளுக்கு சுயபுத்தியும் நன்றாக இருக்கும் அதன் பிறகு வருகின்ற புத்தியும் நன்றாக இருக்கும்.

ராகு கடகம் விருச்சிகம் கன்னி மற்றும் தனுசு ராசியில் இருந்தால் சுயபுத்தியில் அரசாங்கவழியில் நல்மதிப்பு புதிய வாகனம் வாங்குவது எல்லாம் நடைபெறும். நாற்கால் என்று சொல்லுவார்கள். போர் வீலர் வாகனம் வாங்கும் யோகத்தை ஏற்படுத்தி தருவார். 

ராகு வந்து சுபகிரங்களின் பார்வையில் இருந்தால் சுயபுத்தி நன்றாக இருக்கும். அதன் பிறகு வரும் புத்திகளும் நன்றாக இருக்கும். 

மூன்று, ஆறு, பத்து, பதினோன்று என்ற உபயராசியில் இருந்தால் சுயபுத்தி மற்றும் அதன் பிறகு வரும் புத்திகளும் நன்றாக இருக்கும்.

இப்படி இருந்தால் என்ன பலன் 

அரசாங்கவழியில் மதிப்பு நல்ல வேலை வாய்ப்பு. வெளிநாடுகளுக்கு சென்று தங்கி வேலை பார்ப்பது. வெளிநாட்டீனர் வழியாக உதவி பெறுதல். செய்கின்ற வேலையில் பதவி உயர்வு. தனது நிலங்களில் அதிகமான வருவாய். கூடுதல் நிலம் வாங்குவது போன்றவற்றை ஏற்படுத்தி தருவார்.

பணவளர்ச்சியும் அதிகமான அளவில் வரும். தீடீர் பணவரவால் திக்குமுக்காடி போய்விடுவீர்கள். இதனை எல்லாம் ராகு பகவான் உங்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பார்.

உங்களின் ஜாதகத்தில் இப்படிபட்ட நிலையில் ராகு இருந்தால் உங்களுக்கு நல்லது செய்யும் என்று நினைக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: