Followers

Monday, December 15, 2014

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      சக்தியைப்பற்றி பல பதிவுகளில் நாம் பார்த்து வருகிறோம். ஒரு சக்தியை நீங்கள் எடுத்துவிட்டால் அந்த சக்தியிடம் சும்மா சும்மா போய் வேலை வாங்கிகொண்டு இருக்ககூடாது. அந்த சக்தியே உங்களுக்கு பார்த்து நல்லதை செய்துவிடும்.

பொதுவாக சக்தியை எடுத்தவர்கள் அதனை மிக பாதுகாப்பாக தான் பாதுகாப்பார்களே தவிர கண்ட இடத்திலும் பயன்படுத்திக்கொண்டு இருக்கமாட்டார்கள்.

இந்த பிறவியில் ஒரு சக்தி கிடைத்து நாம் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் மட்டுமே என்று நினைத்துக்கொண்டு அதே நேரத்தில் அந்த சக்தி நம்மை விட்டு போய்விடகூடாது என்றும் நினைப்பார்கள்.

உண்மையில் சக்தியை எடுத்த பிறகு அதனை தொலைத்த பிறகு மிகவும் கஷ்டப்படுவார்கள். சக்தியோடு இருந்த வாழ்க்கை வேறு இப்பொழுது இருக்கும் நிலை மிக கொடியது என்று சொல்லுவார்கள். நீங்களும் சக்தியை எடுத்தால் அதனை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: