Followers

Sunday, December 14, 2014

குழந்தை பாக்கியம்


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைய காலத்தில் பல பேருக்கு குழந்தை இல்லாமல் இருக்கின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் முதலில் மனிதனுக்கு ஏற்படும் சூடும் ஒரு காரணமாக இருக்கிறது. 

பல்வேறு வகையில் மனிதனுக்கு ஏற்படும் சூட்டை தணிக்க பல வழிகளை மேற்க்கொள்கின்றனர். பழங்காலத்தில் மனிதன் கைக்கு மருதாணியை இட்டுக்கொண்டு உடலுக்கு குளிர்ச்சியை அளித்தான். 

மருதாணி உடலுக்கு நல்ல குளிர்ச்சியை அளிக்கிறது. இயற்கையான வகையில் கிடைக்கும் மருதாணியை கையில் வைத்தாலே போதும். குழந்தை இல்லாதவர்க்களுக்கு குழந்தை கிடைக்கும். இன்றைய காலத்தில் இயற்கையான மருதாணியை யாரும் பயன்படுத்துவதில்லை என்று தெரிகிறது. இயற்கையான முறையில் கிடைக்கும் மருதாணியை எடுத்து கையில் இட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பொதுவாக ஆண்கள் யாரும் மருதாணியை கையில் இட்டுக்கொள்வதில்லை. முதலில் ஆண்களுக்கு தான் கையில் மருதாணியை இடவேண்டும். ஆண்களுக்கு தான் குறைப்பாடு அதிகம் இருக்கிறது. அதனால் கையில் அழகுக்கு இட்டுக்கொள்ளாமல் குளிர்ச்சிக்காவது மருதாணியை இட்டுக்கொள்ளுங்கள். உங்களின் உடல் நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


No comments: