Followers

Monday, December 29, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      ஒரு வீடு மட்டும் ஒழுங்காக நீங்கள் கட்டிவிட்டால் போதும் அது உங்களை காப்பாற்றுவது போல் உங்களை வேறு ஒருவன் காப்பாற்ற மாட்டான். இதனை நான் பல நண்பர்களிடம் நேரில் சொல்லியுள்ளேன்.

முதலில் நாம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் எதுவெல்லாம் நமக்கு பிரச்சினை கொடுக்கும் என்பதை பார்த்து அதனை விலக்கிவிட்டு எது நமக்கு நல்லது செய்யும் என்பதை பார்த்து தேர்ந்தெடுத்து நமக்கு செய்துக்கொள்ளவேண்டும்.

பொதுவாக இந்தியர்களிடம் அரைகுறை இருக்கும் எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நிறைவாக செய்யமாட்டான். ஆரம்பத்தில் படுவேகமாக செய்ய ஆரம்பிப்பான் முடிவில் ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டு ஒரு அரைகுறையாக செய்துமுடித்துவிட்டு செல்வான்.

அரைகுறையாக எல்லாம் செய்வதால் தான் நாம் கட்டும் வீடு கூட அரைகுறையாக கட்டிமுடித்துவிடுகிறோம். முதலில் அரைகுறையாக இருக்ககூடாது நன்றாக இருக்கவேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துவிட்டு வீடு கட்ட ஆரம்பிக்கவேண்டும்.

பெரிய வீடு தான் அப்படி கட்டவேண்டும் என்பதில்லை சின்ன வீடாக இருந்தாலும் அதனை ஒழுங்காக கட்டிவிட்டால் அதுவே உங்களை எங்கோ கொண்டு சென்றுவிடும். மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் அமைதியை உங்களுக்கு அந்த வீடு பெற்று தந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: