Followers

Friday, December 26, 2014

உங்களின் தெய்வம் எனக்கு ஆசி


வணக்கம் நண்பர்களே!
                      மதுரை வந்து சேர்ந்துவிட்டேன். ஒவ்வொரு ஊர்களுக்கும் நான் செல்லும்பொழுது நமது நண்பர்களை சந்தித்தாலும் அதிலும் எனக்கு பலவிதமான அனுபவங்கள் ஏற்படும்.

பல வருடங்களாக இப்படி சுற்றிக்கொண்டு இருக்கிறேன். பல விதமான மக்களை சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவமும் கிடைக்கிறது. 

நீங்கள் வெளியில் இப்படி சுற்றும்பொழுது அந்தந்த ஊர்களில் இருக்கும் காவல்தெய்வங்கள் மற்றும் அந்தந்த ஊர்களில் இருக்கும் குலதெய்வங்கள் நம்மிடம் தரிசனம் காட்டும். ஆன்மீகவாதியாக இருந்தால் இப்படி தரிசிக்கமுடியும்.

இப்படி தரிசித்துவிட்டு வந்தால் அடுத்த முறை அந்த ஊர்களில் இருந்து ஏதாவது ஒரு வேலை வந்தால் அந்தந்த ஊர்களில் உள்ள தெய்வங்களை வைத்தே முடித்துக்கொள்ள முடியும்.

இதனை நான் பல ஊர்களில் செய்து இருக்கிறேன். அம்மனை வைத்தே அனைத்து வேலையும் செய்வது கிடையாது. அந்தந்த ஊர்களில் உள்ள தெய்வங்களை வைத்தே வேலையை வாங்கிக்கொள்வது எனக்கு கொஞ்சம் எளிதான காரியமாக இருக்கும்.

பொதுவாக எந்த ஊர்களுக்கு போனாலும் அந்தந்த ஊர்களில் இருந்து எனக்கு அழைப்பு வந்துக்கொண்டே இருக்கும். அதற்கு காரணம் இப்படி அந்தந்த ஊர் தெய்வங்களின் அனுக்கிரகத்தை பெறுவதால் அப்படி நடைபெறுகிறது. ஒரு சில ஊர்களில் நானே வேண்டாம் என்று வந்துவிடுவது உண்டு.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: