Followers

Wednesday, December 31, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று புத்தாண்டு ஸ்பெஷசல் பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் சந்தேகம் எழுப்பினர். ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

நண்பர் பரமேஷ் அவர்கள் மானசீகமாக வழிபாட்டை செய்யலாமா என்று கேட்டார்.

மனதில் அபிஷேகம் செய்வது போல் செய்யலாம் ஆனால் நமது மனதில் பல எண்ணங்கள் இடையில் ஏற்படும் நாம் மனதில் செய்கிற வழிப்பாட்டில் தடை இல்லாமல் செய்ய வேண்டும் அந்த மனநிலையில் நீங்கள் இருந்தால் தாராளமாக செய்யலாம். 

முதலில் நீங்கள் நேரிடையாக செய்து பழகிக்கொள்ளுங்கள். அதன் பிறகு மனதில் செய்துக்கொள்ளலாம். நேரிடையாக மனதில் செய்கிறேன் என்று போட்டு மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.

சிவனுக்கு வீட்டில் வைத்து பூஜை செய்வதை விட வெளியில் நீங்கள் சென்று பூஜை செய்வது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால் வீட்டில் வைத்து பூஜை செய்துக்கொள்ளுங்கள்.

சிவ லிங்கங்கள் கடையில் சிறியதாக கிடைக்கும். அதை வாங்கிக்கொண்டு அதற்கு நீங்கள் பூஜை செய்யலாம்.அதனையே நீங்கள் வைத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் செய்துக்கொள்ளலாம்.

பூஜை செய்வதற்க்கு பணம் எல்லாம் அதிகம் தேவைப்படாது. உதிரிபூக்களை வைத்து அர்ச்சனை செய்தால் கூட போதும். எளிமையான அதே நேரத்தில் மிக சக்தி வாய்ந்த ஒரு பூஜையை நான் உங்களுக்கு சொல்லியுள்ளேன். அனைவரும் தாராளமாக செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Kalairajan said...

அய்யா
வணக்கம், சிவனுக்கு வீட்டில் வைத்து அபிஷேகம் செய்தால் அந்த அபிஷேக புனித நீரை என்ன செய்யவேண்டும்.

பிரசன்ன குமார். மு said...

மிக அருமையான தகவல் நன்றி அண்ணா

nallur parames said...

Aamam anna manadhil pala marru ennangal varuvadhu unmaidhan.vilakkadhirku mikka nanri.