Followers

Sunday, December 28, 2014

தினமும் படியுங்கள்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று மதுரையில் இருக்கும்பொழுது திருபரங்குன்றம் சென்று வந்தேன். பிரசித்திப்பெற்ற கோவிலாக இருந்தால் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. அந்த காரணத்தால் நேற்று புகைப்படம் எடுக்கவில்லை. கோவிலில் நல்ல தரிசனமும் நமது மதுரை நண்பரால் கிடைக்கப்பெற்றது.

திருபரங்குன்றம் முருகன் கோவிலை தரிசனம் செய்துவிட்டு மதுரையில் இருந்து நேற்றே தஞ்சாவூர் வந்துவிட்டேன். மதுரைக்கு பயணம் செய்து முடித்த பிறகு பதிவை படித்து மதுரையில் இருக்கிறீர்களா என்று கேட்கிறார்கள். இது ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் ஒரு செயலாகவே உள்ளது. தினமும் பதிவை படிப்பதில்லை என்றும் தெரிகிறது.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுது நமது தொழில் நண்பர்களின் அவசர தேவைக்காக செல்வது உண்டு. அதனால் உங்களுக்கு முன்கூட்டியே என்னால் பதிவில் தெரிவிக்கமுடியவில்லை. எந்த ஆன்மீகவாதி சும்மா இருந்தாலும் நான் சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருக்கமுடியாது. எந்த நேரத்தில் எந்த இடத்தில் பிரச்சினை வரும் என்று எனக்கு சொல்லமுடியாது. தொழில் நண்பர்கள் என்னை கூப்பிட்டுக்கொண்டே இருப்பதால் அப்படி நிலை எனக்கு ஏற்படும்.

ஒவ்வொரு ஊரிலும் அருகில் உள்ள கோவிலுக்கு அவர்களோடு தான் சென்று வருகிறேன். பல நண்பர்கள் எங்களையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கள் என்று கேட்கிறார்கள். நான் ஒவ்வொரு ஊருக்கும் வரும்பொழுது என்னை தொடர்புக்கொண்டால் இது சாத்தியப்படும்.

ஒவ்வொரு ஊர்களுக்கும் நான் அவசரமாக தான் செல்லுவேன் அப்படி நிலை ஏற்படும்பொழுது உங்களுக்கு முன்கூட்டியே பதிவில் தெரிவிக்க முடியவில்லை அதனால் தினமும் ஜாதககதம்பத்தை படியுங்கள். 

அடுத்த பயணம் சென்னைக்கு செல்கிறேன். சென்னையில் உள்ள நண்பர்கள் சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் என்னை இப்பொழுதே தொடர்புக்கொண்டு விடுங்கள். சென்னை வந்தவுடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: