Followers

Tuesday, December 30, 2014

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று பதிவை படித்துவிட்டு அம்மன் பூஜைக்கு கலந்துக்கொள்கிறேன் என்று ஒரு சில நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு போன் செய்தார்கள்.

இவர்கள் அனைவரும் எனக்கு நல்ல பரிச்சம் ஆனவர்கள். இவர்களின் மாத சம்பளத்தை எடுத்து இவர்களின் செலவுக்கு மட்டும் தான் இவர்கள் செலவு செய்யமுடியும்.இவர்கள் எப்படியும் முன்னேறிவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் இவர்களின் பொருளாதார நிலை இவர்கள் எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பதில்லை.

கடன் வாங்கியாவது சாமி கும்பிடவேண்டும் என்று நினைக்கும் மக்கள் நம் மக்கள். இவர்களுக்கு தேவையற்ற தொந்தரவை நான் கொடுக்க விரும்பவில்லை. நான் உங்களின் ஊர்க்கு வரும்பொழுது செய்துக்கொடுக்கிறேன் என்று சொல்லியுள்ளேன்.

நல்ல செல்வநிலையில் இருந்தால் வாருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். கடன் வாங்கிக்கொண்டு சாமியை கும்பிடகூடாது.நல்ல வேண்டுதலை வையுங்கள். உங்களின் ஊர்களுக்கு நான் வரும்பொழுது என்னை சந்தித்து உங்களுக்கு தேவையானவற்றை என்னிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: