Followers

Thursday, December 4, 2014

கோச்சாரப்பலன்


வணக்கம் நண்பர்களே!
                      நான் நிறைய பேரிடம் சொல்லுவேன் கோச்சாரபலனை கண்டு பயப்படவேண்டியதில்லை அதனை எல்லாம் விட்டு தள்ளுங்கள் என்று சொல்லிருக்கிறேன். கோச்சாரப்பலனை கண்டு பயப்படவேண்டியதில்லை தான் ஆனால் அதற்க்காக கோச்சாரபலனே கிடையாது என்பது இல்லை.

தசாபுத்தியில் வருவது நடக்கிறதோ இல்லையோ கோச்சாரப்பலனில் வரும் நல்லது மற்றும் தீயது நடக்காமல் விடாது. ஒரு அடி அடித்தாலும் அது தவறாமல் நல்ல அடியாக பார்த்து அடிப்பதில் கோச்சாரப்பலனுக்கு நிகர் கிடையாது என்றே சொல்லலாம்.

சனிப்பெயர்ச்சியும் அப்படிப்பட்ட ஒன்று தான். உங்களின் ராசிக்கு சனிபகவான் கெடுதல் தரும் நிலையில் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு கெடுதல் செய்யாமல் விடுவதில்லை. அதைப்போல் தான் நல்லதும் நடக்காமல் இருப்பதில்லை. என்ன என்றால் மனிதன் அடிவாங்கும்பொழுது அதனை தாங்கமுடியாமல் தவிக்கும்பொழுது அதன் காயம் மனதில் ஒரு பயத்தை உருவாக்கிவிடுகிறது.

நல்லது நடப்பது அந்தளவுக்கு மனதில் படுவதில்லை. வருவது போல் வந்துவிட்டு சென்றுவிடுகிறது. கண்டிப்பாக சனி நல்லதும் தருகிறார்.எல்லாவற்றையும் பயன்படுத்தும்விதத்தில் இருக்கிறது.

கோச்சாரபலன் தானே என்று இருந்துவிடாமல் குறைந்தபட்சம் கோவிலுக்காவது சென்று வாருங்கள். ஒவ்வொரு பரிகாரமும் பல கோணங்களில் வித்தியாசமாக நான் பல பதிவுகளில் சொல்லியுள்ளேன். அதனை பார்த்து செய்து வாருங்கள்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

No comments: