Followers

Tuesday, December 9, 2014

சனிப்பெயர்ச்சி திருவிழா


வணக்கம் நண்பர்களே!
                      கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிக்கு சென்று  இன்று காலை தஞ்சாவூர் திரும்பிவிட்டேன். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சியை ஒரு திருவிழா போல் கொண்டாடுவார்கள் என்று நினைக்கிறேன். ஊர் எங்கும் சனிப்பெயர்ச்சி விளம்பரம் தூள் கிளப்புகிறார்கள். நல்லது நடந்தால் நன்மைக்கே.

ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள மக்களை சந்திக்கும்பொழுது பல அனுப்பவங்களை நான் பெற்றுக்கொண்டே இருக்கிறேன். என்னிடம் இருந்து ஏதாவது ஒரு நன்மையை பெற்றுவிடவேண்டும் என்பதில் நண்பர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். என்னால் முடிந்தளவு அம்மனை வைத்து உங்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்று பிராத்தனை செய்துக்கொண்டு வருகிறேன்.

தொழில் செய்வதற்க்கு என்று வருபவர்களுக்கு நான் பல முறை சொல்லியுள்ளேன். படிப்படியாக மட்டுமே உங்களுக்கு முன்னேற்றம் கொடுக்கமுடியும். அதே நேரத்தில் என்னை சந்தித்த பிறகு உங்களுக்கு முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே உங்களுக்கு தொடர்ந்து என்னால் செய்யமுடியும்.

ஜாதகத்தை வைத்து உடனே ஏதாவது செய்துக்கொடுக்கமாட்டாரா என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. ஜாதகத்தை வைத்து உடனே எப்படி செய்யமுடியும். அதற்கு காலம் முடிவு செய்யவேண்டும். நீங்கள் நடந்துக்கொள்ளும் முறையை வைத்து தான் நான் வேலை செய்துக்கொடுக்கமுடியும்.

சனிப்பெயர்ச்சிக்கு பல பேருக்கு வேலை செய்ய வேண்டும் அதன் வேலையே எனக்கு நிறைய இருக்கின்றது. சனிப்பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்யவில்லை என்றால் பிரச்சினையில் மாட்டுவது உறுதியாக தெரிகிறது. பல சனி பரிகாரம் உங்களுக்கு சொல்லியுள்ளேன். அதனை எல்லாம் நீங்கள் செய்துவாருங்கள்.

தொழில் செய்யும் நண்பர்களும் சனிப்பெயர்ச்சிக்கு என்று நான் சொல்லிய பரிகாரத்தை செய்துக்கொள்வது நல்லது. சனிப்பெயர்ச்சி தானே பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடாமல் எல்லாேரும் சனிப்பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்துக்கொள்வது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: