Followers

Tuesday, December 23, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
       நேற்று எழுதிய சக்தி பதிவை படித்துவிட்டு நமது நண்பர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் காமத்தை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டார்கள். 

எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் உங்களின் மனைவியிடம் வைத்துக்கொள்ளுங்கள். பல பேர்களிடம் சென்று நோயை வாங்கிக்கொண்டு வந்துவிடாதீர்கள்.

இளம்வயதில் ஆட்டம் ஒவராக ஆடிவிட்டு பிறகு திருமணம் முடிந்த பிறகு குழந்தை இல்லை என்று வருபவர்கள் அதிகம் இப்பொழுது இருக்கின்றார்கள். இளமையில் அதிகம் ஆட்டம் போடுபவர்களுக்கு கவுண்டிங் பிரச்சினை நிறைய பேருக்கு ஏற்படுகிறது. பல பேர்களின் வாழ்வில் இதனை நான் பார்த்து இருக்கிறேன். எதுவுமே ஒழுங்கு முறையில் இருந்தால் மட்டுமே அனைத்தும் நன்றாக இருக்கும். ஒழுங்காக இல்லை என்றால் வருவதை அனுபவிக்கவேண்டும் ஒன்றும் செய்யமுடியாது.

என்னிடம் குழந்தை இல்லை என்று வரும் பல பேர்கள் இளம் வயதில் அதிகம் ஆட்டம் போட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் வந்து ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து எங்களுக்கு குழந்தை பாக்கியத்திற்க்கு பூஜை செய்துக்கொடுங்கள் என்று கேட்பார்கள்.

இவர்கள் பாேட்ட ஆட்டத்திற்க்கு நானா பொறுப்பு ஏற்க முடியும். பார்க்கலாம் என்று சொல்லிவிடுவேன். அதாவது கடவுள் எப்படி நமக்கு ஆப்பு அடிப்பான் என்று தெரியாது. அதனால் இருக்கும்பொழுது ஒழுங்காக இருந்துக்கொண்டு நல்ல வாழ்க்கை வாழவேண்டும். காமத்தை பயன்படுத்த வேண்டும் அதே நேரத்தில் இயற்கையை மீறி செய்ய கூடாது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Vilakkam purikiradhu anna