Followers

Sunday, December 14, 2014

ஆலய தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்களின் ஆவல் நீங்கள் கோவிலுக்கு செல்லும்பொழுது எங்களிடம் சொல்லுவதில்லை. எங்களிடம் சொன்னால் நாங்களும் வருவோம் அல்லவா என்று கேட்கிறீர்கள். இதனைப்பற்றி பழைய பதிவில் சொல்லிவிட்டேன். அப்படி இருந்தும் பல நண்பர்கள் கேட்கிறார்கள்.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுது அங்குள்ள நமது நண்பர்கள் அங்குள்ள கோவிலுக்கு என்னை அழைத்துக்கொண்டு செல்வார்கள். நான் எதுவும் சொல்லுவதில்லை. அந்தந்த ஊர்களில் உள்ள நண்பர்கள் முடிவு செய்து தான் கோவிலுக்கு செல்கிறேன்.

நீங்கள் இதுவரை பார்த்த ஆன்மீகவாதிக்கும் எனக்கும் மிகவும் வித்தியாசம் இருக்கும். இதனை அறிந்தவர்கள் மட்டும் தான் என்னை கோவிலுக்கு அழைத்துக்கொண்டு செல்வார்கள்.

கோவிலுக்கு நான் செல்வது எல்லாம் மிகவும் ஜாலியாக தான் இருக்கும்படி விரும்புவேன். இந்த ஜாலி எப்படி உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும். சந்தோஷமாக ஆன்மீகத்தை விரும்புவன் நான். இதனை எல்லாம் சகித்துக்கொண்டு வருபவர்கள் தாராளமாக வாருங்கள். அந்தந்த ஊர்களுக்கு வரும்பொழுது கண்டிப்பாக என்னை தொடர்புக்கொள்ளுங்கள். கோவிலுக்கு சென்றுவரலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: