Followers

Sunday, December 14, 2014

ஆன்மீகம்


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைய காலத்தில் ஆன்மீகத்தில் இருக்கின்றேன் என்று சொல்லிக்கொள்ள பலருக்கு ஆர்வம் இருக்கிறது. இதனை வரவேற்க வேண்டும்.

ஒவ்வொருவரும் ஆன்மீகவாதி மாறவேண்டும் என்று நான் நினைப்பேன். ஆன்மீகவாதி என்று வெளியே சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. உங்களுக்குள் அது நடைபெறவேண்டும். வெளியில் சொல்லிக்கொள்வதற்க்கு ஆன்மீகத்தை நாடினால் அது உங்களை காவுவாங்கிவிடும்.

நாம் ஆன்மீகவாதியாக மாறிவிட்ட பிறகு நமது குறைகளை நிவர்த்தி செய்துவிட்டு பிறகு தான் அடுத்தவர்களுக்கு நாம் ஏதாவது செய்யபோகவேண்டும். நமது குறைகளே நிவர்த்தி ஆகவில்லை நாம் அடுத்தவர்களுக்கு செய்யபோகிறோம் என்று அடுத்தவர்களின் கர்மாவை வாங்கிக்கொள்ளகூடாது.

ஆன்மீகவாதியாக இன்று மாறிவிட்டேன். எனக்கு நாளைக்குள் என்னுடைய பிரச்சினை அனைத்து தீர்ந்துவிடும் என்று நினைக்ககூடாது. படிப்படியாக உங்களின் குறைகள் எல்லாம் நிவர்த்தி ஆகிவிடும்.

ஒரு சிலர் என்னிடம் வந்து அந்த கோவிலுக்கு சென்றேன் எனக்கு நல்ல வைபேரேஷன் கிடைத்தது என்று சொல்லிவிட்டு எனக்கு இந்த பிரச்சினை இருக்கிறது என்று என்னிடம் சொல்லுவார்கள். உனக்குள் சக்தியை பற்றி புரியும் நிலை ஏற்பட்ட பிறகு என்னிடம் ஏன் வரவேண்டும் என்று நான் நினைப்பேன்.

சக்தியை உணர்ந்த பிறகு அந்த சக்தியை தான் நம்பவேண்டுமே தவிர என்னை நம்பகூடாது. அது உனக்கு காட்டிக்கொடுத்த பிறகு இடையில் நான் எதற்க்கு என்று பலரிடம் நான் கேட்டுள்ளேன் அதனால் உங்களுக்குள் ஆன்மீகத்தை வளருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: