Followers

Sunday, December 14, 2014

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      சக்தியைப்பற்றி நிறைய பதிவில் சொல்லியுள்ளேன். அதனை எல்லாவற்றையும் நீங்கள் படித்து பயன்பெற்று வருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த பதிவில் புதுமையான ஒரு விசயத்தை பார்க்கலாம்.

ஒரு இல்லறம் என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து தான் இருக்கும். அதாவது சிவனும் சக்தியும் சேர்ந்து இருக்கும். இரண்டு வித சக்தியும் சமநிலையில் இருக்கும்பொழுது மட்டுமே அந்த குடும்பம் நல்ல முறையில் இருக்கும். 

பெண்ணின் சக்தி அதிகமானால் குடும்பத்தில் பிரச்சினை தான் வரும். பெண்ணின் சக்தி அதிகம் அடைந்துவிட்டால் ஆணுக்கு பிரச்சினை அதாவது ஆண் பலகீனம் அடைந்துவிடுவான்.

ஒரு பெண் தனது நெற்றியில் இடும் திலகம் மிக முக்கியமானது. நெற்றியில் இருக்கும் பொட்டு மிகப்பெரிய அளவில் ஒரு பெண் வைத்துக்கொண்டால் அந்த பெண்ணின் சக்தி அதிகம் அடைந்துவிடும். வீட்டில் இருக்கும் ஆண் உங்களின் வார்த்தையில் சொல்லபோனால் டம்மியாகிவிடுவார். 

நெற்றியில் பெண்கள் இடும் பொட்டு சிறிய அளவில் இருக்கவேண்டும். பெரிய அளவில் வைத்தால் அம்மன் போல் மாறி ஆணின் பலம் குறைந்துவிடும்.

பின்குறிப்பு
           பெண்கள் இதனை வைத்து ஆணை கீழ் தள்ளிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு பொட்டை பெரிய அளவில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

No comments: