Followers

Saturday, December 20, 2014

மார்கழி மாதம்


வணக்கம் நண்பர்களே!
                      கடந்த ஒரு வாரக்காலம் கடும் காய்ச்சலில் அவதிப்பட்டேன்.முடிந்தளவுக்கு பதிவை கொடுத்தேன். உடல் மோசமான நிலையில் இருந்த நாட்களில் உங்களுக்கு பதிவு தரமுடியவில்லை. தஞ்சாவூரில் தொடர்ச்சியாக மழை பெய்துக்கொண்டே இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தான் நல்ல மழை தஞ்சாவூர் பகுதியில் பெய்து இருக்கிறது. இன்று ஒரளவு உடல் நிலை நன்றாக இருந்தவுடன் பதிவை எழுத ஆரம்பித்துவிட்டேன்.

மார்கழி மாதத்தை பற்றி நமது நண்பர்கள் கேள்வி கேட்டுருந்தனர். அதனைப்பற்றி சொல்லலாம் என்று இப்பதிவு. மார்கழி மாதத்தில் எந்த வித நல்ல காரியங்களும் செய்யகூடாதா என்று கேட்டுருந்தார்கள். மார்கழி மாதத்தில் நல்ல காரிங்களுக்கு தேவையான முன் ஏற்பாடுகளை செய்யலாம்.

ஒரு திருமண ஏற்பாடு நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஜாதகப்பொருத்தம் பார்ப்பது மாப்பிள்ளை வீட்டை பார்ப்பது பெண் வீட்டைபார்ப்பது எல்லாம் வைத்துக்கொள்ளலாம். முடிவு செய்துவிட்டு அதனை விழாவாக கொண்டாட கூடாது. மார்கழி மாதம் முடிந்த பிறகு விழா வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு நண்பர் வீடு குடி போகலாமா என்று கேட்டார். வீடு குடி போககூடாது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் மார்கழி மாதம் கொண்டாட கூடாது. மார்கழி மாதம் முடிந்த பிறகு வைத்துக்கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: