Followers

Thursday, December 25, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      வீட்டைப்பற்றி சொல்லிவரும் கருத்துக்களை நன்றாக உன்னிப்பாக கவனித்து படித்து பாருங்கள். அதில் உள்ள கருத்துகள் உங்களை தெளியவைக்கும். நான் சொல்லவரும் விசயம் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் விசயமாக அது இருக்காது. அதனை கற்றுதர முடியாது. அனைத்தும் படு ரகசியமானவை. உங்களுக்கு அப்படிப்பட்ட வீடு தேவைப்பட்டால் என்னை தொடர்புக்கொண்டு உங்களின் வீட்டை கட்டிக்கொள்ளலாம் அல்லது கட்டியவீட்டை மாற்றிக்கொள்ளலாம்.

ஏன் ரகசியம்?

பொதுவாக மக்கள் ஒரு இடத்திற்க்கு அதாவது கோவில் அல்லது ஆசிரமம் போன்றவற்றிக்குள் உள்ளே சென்றாலே யாருடைய வழிகாட்டுதல் இல்லாமல் அவர்களே அதற்குள் வயப்பட்டுவிடவேண்டும்.

கோவில்களுக்குள் நீங்கள் சென்றால் உங்களின் மனம் அதுவாகவே அமைதி அடைந்துவிடும். அதற்கு காரணம் கட்டட அமைப்பு அப்படிப்பட்டது. பிரபஞ்ச சக்தியை அப்படியே உள்ளேயே தேக்கி வைத்து இருப்பதால் நீங்கள் உள்ளே சென்றவுடன் உங்களுக்கு சக்தி கிடைப்பது போல் செய்துவிடுவார்கள்.

இதனை வெளியில் விட்டால் கோவிலுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தால் ரகசியமாக இதனை வைத்துள்ளார்கள். எனக்கு சொல்லிக்கொடுத்தவர்களும் இதனை வெளியில் சொல்லிவிடாதே என்று சொல்லியதால் இதனைப்பற்றி உங்களுக்கு சிறிய கருத்தை மட்டும் சொல்லிவருகிறேன்.

நிறைய ஆசிரமங்களில் இந்த டெக்னிக் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் உள்ளே சென்றவுடன் ஒரு அமைதி அதுவாகவே நடந்துவிடும். இதனை நீங்கள் குருவின் சக்தி என்று நினைத்துக்கொண்டு இருப்பீர்கள் அது தான் தவறு. அந்த ஆசிரமம் அப்படி கட்டப்பட்டு இருக்கிறது.அந்த கட்டிடம் உங்களை அப்படி மாற்றிவிடும்.

ஆசிரமத்தில் வருகின்ற ஒவ்வொரு ஆளுக்கும் உட்கார்ந்துக்கொண்டு குரு அமைதியை கொடுத்துக்கொண்டிருந்தால் அவருக்கு சக்தி போய்விடும். அதனை எல்லாம் கருத்தில் கொண்டு இப்படி கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. நீங்களே இதனை சோதனை செய்துவிட்டு என்னிடம் வந்து சொல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: